டி.ஆர்.பி.காக இப்படியா? ட்ரோல் மெட்டீரியலாக மாறிய கார்த்திகை தீபம்; காரணம் இதுதான்!

ஜீ தமிழின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கும் கார்த்திகை தீபம் சீரியல் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது.

ஜீ தமிழின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கும் கார்த்திகை தீபம் சீரியல் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Karthigai deepam Serial Troll

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல் கார்த்திகை தீபம். செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திக் ராஜா நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் ஜீ தமிழில் டி.ஆர்,பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியல் தற்போது கடும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது.

Advertisment

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீபா தொலைந்து போன நிலையில், அவரை தேடி சென்ற கார்த்திக் தீபா போலவே இருக்கும் கீதாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். அதன்பிறகு தீபாவை தேடும் பணியில் இப்போது கார்த்திக் ஈடுபட்டுள்ளார். இதனிடையே தீபா எழுதி வைத்த டைரியை கீதா படிப்பது போன்ற காட்சி கடந்த இரு தினங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த காட்சி தான் தற்போது ட்ரோல்களை சந்தித்து வருகிறது.

சீரியலின் நேற்றைய எபிசோட்டில், கார்த்திக் மற்றும் தீபா என இருவரும் ரெஸார்ட்டில் வெளியே நடந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தீபாவை பாங்கு ஒன்று கடித்து விட கார்த்திக் அவளை ரூமுக்கு தூக்கி ஓடி வருகிறான்.  பிறகு ரெசார்ட்டில் இருக்கும் டாக்டர்களை கூப்பிட்டு  தீபாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க டாக்டர் விஷம் இல்லாத பாம்பு தான்.. அதனால் பயப்பட வேண்டியது இல்லை என்று சொல்கிறார்.

அதே நேரத்தில் நைட்டு மட்டும் தூங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் கார்த்திக் நாம ரூமுக்குள்ள இருக்க வேண்டாம் என்று சொல்லி தீபாவை வெளியே அழைத்து வருகிறான். சூட்டிங் இருக்கு வந்திருந்தவர்கள் விஷயம் அறிந்து தீபா தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக  நைட் எல்லாம் கூட்டு சேர்ந்து ஆட்டம் பாட்டம் என என்டர்டெயின்மென்ட் செய்கின்றனர்.

Advertisment
Advertisements

தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், அடுத்த நாள் காலையில் தீபா மற்றும் கார்த்திக் இருவரும் ரிசார்ட்டில் இருந்து வீட்டிற்கு கிளம்ப இன்னொரு பக்கம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் போலி துப்பாக்கிக்கு பதில் ரியல் துப்பாக்கி மாறியது தெரியாமல் ஷூட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த தீபா, கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றிவிடுகிறாள்.அதன் பிறகு டைரக்டர் துப்பாக்கியை எடுத்து பார்த்து உண்மை துப்பாக்கி என அறிந்து தீபாவிற்கு நன்றி சொல்கிறார்.

அடுத்து கார்த்திக் மற்றும் தீபா கிளம்பி வருகின்றனர், டைரியின்  மூலமாக தீபாவின் காதல் குறித்து படித்து அறியும் கீதா கூடிய சீக்கிரம் தீபா திரும்பி வரணும், கார்த்திக் மேலே எவ்வளவு காதலோடு இருக்காங்க என்று வேண்டி கொள்கிறாள். கடந்த சில வாரங்களாக, கார்த்திக தீபா இணைவார்களா என்ற கேள்வியுடனும் எதிர்பார்ப்புடனும், பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது டி.ஆர்.பி-க்காக இப்படி கார்த்திக் தீபா காட்சிகளை வலுக்கட்டாயமாக சேர்த்ததாக கூறி ட்ரோல் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: