கழிவறை திரவத்தை குடித்து தற்கொலை முயற்சி: தீவிர சிகிச்சையில் சின்னத்திரை நடிகை: போலீஸ் விசாரணை

நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவில், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவில், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kayal Actress

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வரும் அமுதா என்பவர், கழிவறை சுத்தம் செய்யும் திரத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

சின்னத்திரை நடிகைகள், தற்கொலை சம்பவம் அவ்வப்போது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வி.ஜே.சித்ரா போன்ற நடிகைகள் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கயல் சீரியலில் துணை நடிகையாக நடித்து வரும் நடிகை அமூ தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்த இவர், தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவில், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அமுதாவின் தற்கொலை முயற்சி தொடர்பாக, அவரது கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kayal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: