மாயனுக்கு ஜோடியாகும் அரண்மனைக்கிளி: விஜய் டிவி சீரியலின் புதிய அப்டேட்
Aranmanai kili Monisha replaces Rachitha mahalakshmi in Naam iruvar Namakku iruvar 2 serial Tamil News: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மஹாவாக நடிக்க உள்ள நடிகை குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Aranmanai kili Monisha replaces Rachitha mahalakshmi in Naam iruvar Namakku iruvar 2 serial Tamil News: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மஹாவாக நடிக்க உள்ள நடிகை குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
naam iruvar namakku iruvar serial Tamil News update: சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் பிரபலமான தொலைக்காட்சியாக விஜய் டிவி உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுகின்றன. அந்த வகைகள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று பட்டிதொட்டியெல்லாம் பாப்புலரான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.
Advertisment
இந்த சீரியலின் முதல் சீசன் மெகா ஹிட் அடித்தது. எனினும், கொரோனா பெருந்தொற்றல் நடுவில் நிறுத்தப்பட்டது. தற்போது சீசன் 2 ஆக புதிய கதை களம் மற்றும் புதிய நடிகர்களோடு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வந்த ஆர்ஜே செந்தில் பாதியில் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனால் சில நாட்களுக்கு சுணக்கம் கண்டது. பின், மீண்டும் வழக்கம் போல வரவேற்பை பெற்றது.
Advertisment
Advertisements
தற்போது இதன் இரண்டாம் சீசன் பல திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் சீரியலில் மஹா- வாக நடிக்கும் முன்னணி கதாநாயகி ‘ரச்சிதா மகாலட்சுமி’ விலகுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் சீரியலில் இருந்து விலகுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கடந்த வாரத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரி போஸ்டில் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அடுத்து மஹாவாக நடிக்க உள்ள நடிகை குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அரண்மனைக்கிளி சீரியலில் நாயகியாக நடித்த 'மோனிஷா' தான் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதும் இதுவரை வெளிவரவில்லை.
அரண்மனைக்கிளி மோனிஷா
'அரண்மனைக்கிளி' சீரியலில் ஜானுவாக வாழ்ந்தவர் மோனிஷா என்றால் நிச்சயம் மிகையாகாது. இந்த சீரியல் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற இவரும் ஒரு காரணம். கொரோனா தொற்று பரவலால் ஷூட்டிங் செய்ய முடியாமல் தவித்த சீரியல் குழு அரண்மனைக்கிளி சீரியலை பாதியிலேயே கைவிட்டது. இதனால் சீரியலில் இருந்து விலகும் நிலை மோனிஷாவுக்கு ஏற்பட்டது.
அரண்மனைக்கிளி மோனிஷா
தொடர்ந்து எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த மோனிஷா தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மீண்டும் தோன்றவுள்ளார் என்கிற செய்தி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அரண்மனைக்கிளி மோனிஷா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“