கதிர் மாமா... மீண்டும் முல்லை ரொமான்ஸ்! களைகட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores Serial News Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிக ரசிகர்களை கொண்ட கதிர் - முல்லை ஜோடி விரைவில் திருப்பம் ஏற்படபோவதாக நடிகை காவ்யா தெரிவித்துள்ளார்.

Pandian Stores Serial News Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிக ரசிகர்களை கொண்ட கதிர் - முல்லை ஜோடி விரைவில் திருப்பம் ஏற்படபோவதாக நடிகை காவ்யா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
கதிர் மாமா... மீண்டும் முல்லை ரொமான்ஸ்! களைகட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pondian Stores Kathir Mullai Romance : தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மக்கள் மத்தியில் ஒரு சில தொடர்களே நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், மக்களின் மனதில் அதிகம் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் தம்பிகளின் பாசப்பினைப்பினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைள் அனைவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதில் ஜீவா - மீனா ஜோடிக்கு குழந்தை உள்ள நிலையில் மூத்த அண்ணன் சத்தியமூர்த்தி தனம் ஜோடிக்கு தற்போது குழந்தை பிறக்க உள்ளது.

Advertisment

இடையில் அதிக ரசிகர்களை கொண்ட கதிர் முல்லை ஜோடி இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே இருப்பார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக  கதிர் மற்றும் முல்லை இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் எப்போது தொடங்கும் என நடிகை காவ்யா பதில் கூறியுள்ளார்.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த  நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு ரோலில் நடித்து வந்த காவ்யா தான் தற்போது முல்லையாக நடிக்க தொடங்கினார். இந்த வாய்ப்பு குறித்து நடிகை காவ்யா கூறுகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வாய்ப்பு கிடைப்பதற்கு மன்பு, இந்த சீரியலை பார்த்தது கூட இல்லை எதுவும் தெரியாமல் தான் சென்று குழுவினர் சொன்னபடி டெஸ்ட் ஷூட்டில் நடித்தேன். என கூறியுள்ளார்.

மேலும் இதற்கு முன் முல்லையாக நடித்த சித்ரா போல இமிடேட் செய்து நடிக்க முடியாது என ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் என்று தெரிவித்துள்ள அவர், தன்னுடைய ஸ்டைலில் நடிக்க குழுவினரும் ஒப்புக்கொண்டார்கள் என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து கதிர் - முல்லை ரொமான்ஸ் மீண்டும் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்பதாக கூறிய அவர், இப்போது தான் சின்ன சின்ன ரொமான்ஸ் தொடங்கி வருகிறது. விரைவில் அதிக அளவு ரொமான்ஸ் காட்சிகள் வரும் என அவர் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

மேலும் தற்போது கதிரை 'மாமா.. மாமா' என அழைக்கும் காட்சிகள் படமாக்கி இருக்கிறார்கள். வரும் நாட்களில் அது ஒளிபரப்பாகும் என்றும் காவ்யா குறிப்பிட்டு உள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: