Advertisment

Vijay TV Serial: பார்வதி பாய் ஃபிரண்ட் உடன் பைக்கில் செல்லும்போது பார்த்த சந்தியா!

சந்தியா வெளியே இருந்து வீட்டுக்கு வருகிறாள். பின்னர், பார்வதியிடம் சந்தியா, “பார்வதி காலேஜ்க்கு போயிட்டு வந்திட்டியா?” என்று கேட்கிறாள். இதைக் கேட்டு பார்வதி ஷாக் ஆகிறாள். தான் வெளியே விக்கியுடன் பைக்கில் போனது தெரிந்துவிட்டதோ என்று முழிக்கிறாள்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial, Raja Rani 2 Serial, Raja Rani 2, Alya Manasa, Sandhya doubtfuls on Parvathi, Sidhu, Sivagami, விஜய் டிவி சீரியல், ராஜா ராணி 2, ஆல்யா மானசா, பார்வதி பாய் ஃபிரண்ட் உடன் பைக்கில் செல்லும்போது பார்த்த சந்தியா, சந்தியா, சித்து, சரவணன், சிவகாமி, saravanan, sandhya, archana, sundaram, raja rani 2 today episode

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் அடைந்து வருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம். இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார்.

Advertisment

சந்தியா, கடைக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பேக்கில் சாப்பாட்டு கேரியரை எடுத்துக்கொண்டு செல்கிறாள். அப்போது, அந்த இடத்தில் தூரத்தில் சில இளைஞர்கள் கும்பலாம நின்றுகொண்டு அந்த வழியாக போகிற வருகிற பெண்களை கடுமையாக ஈவ் டீஸிங் செய்துகொண்டிருக்கிறார்கள். பெண்கள் பலரும் அவர்களிடம் இருந்து தப்பி வேகமாகச் செல்கிறார்கள். இதைப் பார்த்த சந்தியா கோபமடைகிறாள். அருகே இருக்கும் ஒரு வயதான பெண்ணிடம் அந்த பசங்க பொண்ணுங்களை கிண்டல் பண்றாங்க யாருமே கேட்கவில்லையா என்று கேட்கிறாள். அதற்கு அவர் யாரு சொன்னாலும் அவனுங்க மதிப்பதில்லை என்று சொல்கிறார்.

அங்கே பெண்களை ஈவ் டீஸிங் செய்துகொண்டிருப்பவர்களைப் கவனமாக பார்த்த சந்தியாவுக்கு அதில் ஒருவன் சந்தியாவுக்கு தெரிந்த சந்திரா அக்கா பையன் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து, அந்த வயதான பாட்டியிடம், அந்த பையன் சந்திரா அக்கா பையன்தானே என்று கேட்கிறாள். அதற்கு, அவரும் ஆமாம்மா எனக்கே இப்பதான் அடையாளம் தெரிகிறது என்று கூறுகிறார்.

இதையடுத்து, சந்தியா தான் கொண்டுவந்திருந்த சாப்பாட்டு கேரியரை அந்த பாட்டியிடம் கொடுத்து கடையில் கொடுக்கச் சொல்லிவிட்டு செல்கிறாள். சந்தியா அங்கிருந்து சந்திரா வீட்டுக்கு செல்கிறார்.

சந்தியா அந்த வீட்டு முன்பு நின்று சந்திரா அக்கா சந்திரா அக்கா என்று கூப்பிடுகிறாள். வீட்டில் இருந்து சந்திரா, அவருடைய கணவர், மகள் 3 பேரும் வருகிறார்கள். அவர்களிடம் சந்திரா அக்கா, தப்பா நினைச்சுக்காதீங்க உங்க பையன் என்று சொல்லும்போதே, அவனுடைய அப்பா, உங்கிட்ட ஏதாவது தப்பா நடந்துகிட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு சந்தியா, உங்க பையன் என்கிட்ட எதுவும் தப்பா நடந்துக்கல, ஆனால், ரோட்ல பசங்களோட சேர்ந்து கும்பலா நின்றுகொண்டு அந்த வழியாக வருகிற போகிற பெண்களை கிண்டல் செய்கிறான் என்று கூறுகிறாள். இதைக்கேட்ட, சந்திரா அக்காவின் மகள், ஆமாம் அக்கா, இவன் என்னுடைய ஃபிரெண்ட்ஸ்களையும் இதே போல கிண்டல் செய்திருக்கிறான். அவங்க எல்லாம் எனக்கு போன் பண்ணி சொல்கிறார்கள். இவனால், எனக்கு அசிங்கமா இருக்குது என்று சொல்கிறாள். சந்திரா அக்காவும், ஆமாம்மா இவனால எங்களுக்கு அவமானமா இருக்குது. அவன் அப்படி நடந்துக்கிறதால இவருக்கும் அதை நினைச்சு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சுமா என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட சந்தியா, உங்க பையனை திருத்துவதற்கு நான் ஒரு ஐடியா சொல்கிறேன் என்று ஒரு திட்டத்தை சொல்கிறாள். அவர்களும் சந்தியாவின் திட்டத்துக்கு ஒத்துக்கொள்கிறார்கள்.

சந்தியாவின் திட்டப்படி, சந்திரா அக்காவின் மகள் துப்பட்டாவை தலையில் மூடியபடி, பசங்க பெண்களை கிண்டல் செய்கிற இடத்துக்கு செல்கிறாள். அப்பொது, அந்த பெண்ணின் அண்ணன் தனது தங்கை என்று தெரியாமல் ஈவ் டீசிங் செய்கிறான். அவள் அமைதியாக, அங்கே இருக்கும் வளையல் கடைக்கு சென்று நிற்கிறாள். அப்போது, ஒரு பையன் யார்ரா இந்த பொண்ணு என்று கேட்டு அவளுடைய முகத்தை பார்க்கலாம் என்று அவளின் கைகளைப் பிடித்து இழுக்கிறான். அப்போது சந்திரா அக்காவின் மகள், முகத்தை மறைத்திருந்த துப்பாட்டாவை விலக்குகிறாள்.

அவர்கள் கிண்டல் செய்த பெண் தனது தங்கை என்று தெரிந்ததும் சந்திரா அக்கவின் மகன் அதிர்ச்சி அடைகிறான். பிறகு, தனது நண்பனிடம் விடச் சொல்லி கேட்கிறான். ஆனால், அவன் மச்சான் உன் ஆளா என்று கேட்டு விட மறுக்கிறான். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆக சந்திரா அக்காவின் மகன் அவனை அடிக்க கையை ஓங்குகிறான். அப்போது, சந்தியா அவனது கையைப் பிடித்து நிறுத்துகிறாள்.

மற்ற பெண்களை கிண்டல் செய்யும்போது கோபம் வரவில்லை. உன் தங்கையை கிண்டல் செய்தால் கோபம் வருகிறதா, அவங்களுக்கும் ஒரு அண்ணன் இருப்பான் இல்லையா என்று கேள்வி கேட்கிறாள். அவன் என்ன சொல்வது என்று அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கிறான். இப்பதான் எல்லா பெண்களும் வீட்டை விட்டு வெளியே வந்து படிக்க போகிறார்கள். உங்களை மாதிரி ஆளுங்க கிண்டல் செய்தால் பிறகு அந்த பெண் வெளிய வரவே பயப்படுவாள்.

தம்பி உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கிறது. நீங்கதான் இந்த முக்கு சந்துல கிண்டல் பண்ணிகிட்டு இருக்கிறீங்க. இது உழைக்க வேண்டிய வயசு. உழைச்சு ஒரு அடியாவது முன்னேறுகிற வழியைப் பாருங்கள் என்று கூறுகிறாள்.

அந்த பையனும் தன்னுடைய தவறை உணர்ந்து திருந்துகிறான். இனிமேல், நான் செய்யமாட்டேன் என்று கூறுகிறான்.

அடுத்த காட்சியில், பார்வதி காலேஜ்க்கு போவதாக சொல்லிவிட்டு பேங்கில் இருக்கிறாள். அங்கே இருந்து தனது பாய் ஃபிரெண்ட்க்கு விக்கிக்கு போன் பண்ணி எங்கே இருக்கிற, எப்போது வருவாய் என்று கேட்கிறாள். அதற்கு பேங்க் வரவேண்டும் என்று கூறுகிறான். நான் வரும் வரை அங்கே அருகில் இருக்கும் கேண்டில் வெயிட் பண்ணு என்று சொல்கிறான். பார்வதியும் கேண்டினுக்கு சென்று விக்கிக்காக காத்திருக்கிறாள்.

அந்த நேரம் பார்த்து, அர்ச்சனா பேங்கில் புடவை விற்பனை செய்ய தனது தங்கையுடன் வருகிறாள். பிறகு, பேங்க் அருகே பார்வதி காத்திருக்கும் அதே கேண்டீனுக்கு வருகிறாள். அங்கே அர்ச்சனாவின் தங்கையை பெண் பார்க்க வந்துவிட்டு, பார்வதியை பிடித்திருப்பதாக சொன்ன ராஜா வந்திருக்கிறான். அர்ச்சனாவிடம் அவளுடைய தங்கை அந்த மாப்பிள்ளையை எனக்கு பிடித்திருக்கிறது. அவனை எனக்கு கல்யாணம் பண்ணி வை என்று கேட்கிறாள். பிறகு, அர்ச்சனாவும் அவளுடைய தங்கையும் ராஜாவைப் பார்க்க வருகிறார்கள்.

அர்ச்சனா ராஜாவுக்கு லட்டு தருகிறாள். பிறகு தனது தங்கையை கல்யாணம் செய்துகொள்ளுங்கள். நன்றாக சமைப்பாள் என்று என்று கூறுகிறாள். அதற்கு அவன் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்டேன் இல்லை என்று சொல்கிறான். பிறகு, அர்ச்சனா, அந்த பார்வதி மேல பார்க்கத்தான் அழகு, ஆனால், அவள் தலை எல்லாம் ஈரு, பேன், பொடுகு இருக்கும். சுத்தமே கிடையாது. அதுமட்டுமில்லை, ராத்திரியில எல்லாம் தீடீர்னு அவள் கத்துவாள், அவளுக்கு எதுவோ ஒரு வியாதி இருக்கிறது என்று கூறுகிறாள்.

இதையெல்லாம், அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த அடிப்பாவி உன் தங்கச்சி கல்யாணம் பண்ணி வைக்க என்னைப் பற்றி குறை சொல்றியா. அதுவும் இப்படியா சொல்றது என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள். பிறகு, அர்ச்சனாவும் அவளுடைய தங்கையும் அங்கே இருந்து போகிறார்கள்.

இதையடுத்து, பார்வதியின் பாய் ஃபிரெண்ட் விக்கி அங்கே வருகிறான். விக்கி இங்கிருந்து பைக்கில் வெளியே வேறு எங்கயாவது சென்று பேசலாம் என்று அழைத்து செல்கிறான். அப்படி பார்வதி விக்கியுடன் பைக்கில் அமர்ந்துகொண்டு செல்லும்போதுதான், சந்தியா அவர்களைப் பார்க்கிறாள். தன்னை பார்வதி பார்த்துவிடக் கூடாது என்று சந்தியா ஒலிந்துகொள்கிறாள். அவர்கள் போன, பிறகு சந்தியா, இது பார்வதிதான் சந்தேகமே இல்லை. அதே டிரஸ், அதே பேக் பார்வதிதான். இது என்ன புது பிரச்னை என்று மனதில் நினைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்கிறாள்.

அடுத்த காட்சியில், வீட்டில் சிவகாமி துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருக்கிறார். உடன் மயிலும் இருக்கிறாள். அப்போது பார்வதியும் வருகிறாள். பார்வதி தனது காலேஜ் பேக்கை கழட்டி போடுகிறாள். இதைப் பார்த்த சிவகாமி அவளை கண்டிக்கிறாள். அந்த நேரம் பார்த்து அர்ச்சனாவும் வீட்டுக்கு வருகிறாள். அர்ச்சனா வந்ததும் பார்வதி தன்னைப் பற்றி அவள் சொன்னதை நினைத்துக்கொண்டு அம்மா தலையெல்லாம் ஒரே ஈரு பேணா இருக்குதுமா, ராத்தியில் எல்லாம் கத்துற சத்தம் கேட்குதும்மா, எனக்கு ஏதோ வியாதி இருக்குமா என்று கூறுகிறாள். இதைக் கேட்டு அர்ச்சனா அறண்டு போகிறாள். என்ன, நாம் சொன்னதெல்லாம் இவள் சொல்கிறாள் என்று முழிக்கிறாள். பார்வதி, அண்ணி என் தலையில ஈரு, பேன் இருக்குதா பாருங்க என்று கேட்கிறாள். அர்ச்சனா அதிர்ச்சியில் அங்கே இருந்து செல்கிறாள்.

பார்வதி சொன்னதைக் கேட்ட சிவகாமி, உனக்கு அதெல்லாம் ஒன்னும் வேப்பிலையை எடுத்து அடிச்சா சரியா போய்விடும் என்று கூறுகிறாள். அப்போது, சந்தியா வெளியே இருந்து வீட்டுக்கு வருகிறாள். பின்னர், பார்வதியிடம் சந்தியா, “பார்வதி காலேஜ்க்கு போயிட்டு வந்திட்டியா?” என்று கேட்கிறாள். இதைக் கேட்டு பார்வதி ஷாக் ஆகிறாள். தான் வெளியே விக்கியுடன் பைக்கில் போனது தெரிந்துவிட்டதோ என்று முழிக்கிறாள். பிறகு காலேஜ்தான் போய்விட்டு வந்தேன் என்று கூறுகிறாள். பார்வதியின் முகத்தில் குழப்பம் தெரிவதை சந்தியா பார்த்துக்கொண்டே செல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Alya Manasa Raja Rani 2 Raja Rani 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment