தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. இந்த சீரியல்களில் வரும் கதாப்பாத்திரங்களும் மக்கள் மத்தியில் நீங்க இடத்தை பெறும். மேலும் ஒரு சில சீரியல்களில் வரும் நாயகிகள் செய்யும் அனைத்து செயல்களையும் பின்பற்ற தனி கூட்டமே உள்ளது. அந்த வகையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் கடந்த ஜனவரி மாதம் டாப் 5 இடங்களை பெற்ற கதாநாயகிகளின் பெயரை தனியார் இணையதளம் ஒன்று பட்டியலிட்டுள்ளது.
.இதில்
- கண்ணம்மா
- முல்லை
- ரோஜா
- பாக்யலெட்சுமி
- பார்வதி
கண்ணம்மா :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பார கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிப்பிரியன் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி தனது வைராக்கியத்தின் மூலம் முன்னுக்கு வரும் கண்ணம்மா இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.
முல்லை :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப உறவுகள் மற்றும் சகோதர பாசத்தை மையமாக வைத்து வெளியாகி வரும் இந்த தொடர் தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரியலில் முன்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா மரணமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி நடித்து வருகிறார். சித்ராவை போலவே தனது எதார்த்மான நடிப்பின் மூலம் காவிய ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.
ரோஜா :
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தமிழகம் முழுவதும் பெரும் பிரபலம். அதுவும் இந்த சீரியல் நாயகன் அர்ஜூன் நாயகி ரோஜா இடையேயான ரொமான்ஸ் கட்சிகளுக்காகவே இளைஞர்கள் பலர் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். இதில் ரோஜாவாக நடித்து வரும் பிரியங்கா நல்கரி சிறப்பாக நடிப்பை வெளியப்படுத்தி இல்லத்தரசிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
பாக்யலெட்சுமி :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு ஹிட் சீரியல் பாக்யலெட்சுமி. குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளின் வாழ்வியலை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பாக்யலெட்சுமியாக நடித்து வரும் கே.எஸ்,சுஜித்ரா தனது அமைதியான நடிப்பின் மூலம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். குடும்பத்தில் எவ்வித குழப்பங்கள் வந்தாலும் தனது அமைதியாக பேச்சின் மூலம் கையாண்டு வருகிறார் பாக்யலெட்சுமி.
பார்வதி:
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல்ல் பார்வதியாக நடித்து வரும் ஷாபனா ஷாஜகான், தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இளம் ரசிகர் பட்டாளங்களை சேர்த்துள்ளார். இதில் நாயகன் ஆதியாக நடித்து வந்த கார்த்திக் ராஜ் சமீபத்தில் நீக்கப்பட் அவருக்கு பதிலாக விஜே அக்னி ஆதியாக நடித்து வருகிறார். தொடக்கத்தில் இவர்களின் ரொமான்ஸ் கட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"