Sun TV Magarasi Serial : 'மகராசி' சீரியலில் பாரதியின் சித்தப்பா, செந்தூர பாண்டிக்கு பயந்து புவி தன்னால் தனியா போராட முடியாதுன்னு ஒளிஞ்சு இருந்தது எல்லாம் ஓகே. இப்போ அம்மா கதறி அழுதுகிட்டு புவி நீ எங்கிருந்தாலும் வந்து சேர்ந்துருன்னு போட்டோ போட்டு விளம்பரம் கொடுக்கறாங்க. அந்த விளம்பரத்தை பாரதியும் அன்பு கிட்டே கொடுத்து அனுப்பி, என் புவி இதை பார்த்தாவது வந்து சேர்ந்துடணும்னு கண்ணீரோடு கொடுத்து அனுப்புகிறாள். அப்போதும் புவியின் கல் மனசு நான்தான் அம்மா உங்க பிள்ளைன்னு சொல்ல தோணலை.
நான் தான் பாரதி உன்னோட புருஷன்னு சொல்லி பொண்டாட்டி பாரதியை கட்டிப் பிடிச்சு கதறலை. என்னங்க கதை விடறீங்க? இப்போ, தன் புருஷன் புவி தான் ஹாஸ்பிடலில் இருந்தான் என்றும் அவனுக்குத் தான் நம்ம வைத்தியம் பார்த்து இருக்கோம்னு பாரதிக்கும், புவி குடும்பத்துக்கும் தெரிய வருது. இனிமே எப்போ, மில்லில் வேலை பார்க்கும் அன்பு தான் புவின்னு தெரிய வந்து, அவனை வீட்டுக்குள் சேர்த்து, பிள்ளை என்று கொண்டாடி மகிழ்ந்து... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா...!
Advertisment
Advertisements
பாரதிக்கு மட்டும் தெரிந்த ஒரு பாட்டை மவுத் ஆர்கனில் வாசிச்சு புவி அன்புன்னு பேர் வச்சுக்கிட்டு இதோ பக்கத்தில் இருக்கும் இவங்க சொந்த மில்லில் தான் வேலை பார்க்கிறான். இது தெரியாமல் இவங்க சென்னையில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சிசிடிவி ஃபுட்டேஜ் கேட்டு இருக்காங்களாம். அது வந்த உடனே புவிக்கு என்ன நேர்ந்துச்சு பார்த்துட்டு, புவி எங்கே போயிருக்கான்னு கண்டு பிடிக்க போறாங்களாம். மகராசின்னு சீரியலுக்கு பேர் வச்சத்துக்கு பதில் கண்ணாமூச்சு என்று பேர் வச்சு இருக்கலாம். இப்படியே போனால். எத்தனை லாக்டவுன் வந்தாலும் இவங்க கண்ணாமூச்சுக்கு லாக்டவுன் இல்லை!