Tamil TV News: சன் டிவி-யின் நந்தினி சீரியல் சிறப்பு கொண்டாட்டம் நிகழ்ச்சியை சன் டிவி மறு ஒளிபரப்பு செய்தது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் சுந்தர் சி மனைவி குஷ்பூவுக்கு மல்லிப்பூ அலர்ஜி என்று சொன்னார். ஷோவில் நந்தினி சீரியல் ஆர்ட்டிஸ்ட் அனைவரும் கலந்துக்கொண்டு நந்தினி சீரியல் குறித்தும், தயாரிப்பாளர் சுந்தர் சி குறித்தும் பேசினார்கள். இதில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை சச்சு முக்கிய வேடத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.
அம்மா தான் பக்க பலம்… தேன் குரலுக்கு சொந்தக்காரியான சூப்பர் சிங்கர் பிரியங்கா!
சுந்தர் சி குறித்து நந்தினி சீரியல் நாயகி நித்யா ராம் பேசுகையில், சுந்தர் சி சாரை படத்தில் பார்த்து இருக்கிறேன். நேரில் பார்த்து அசந்து போயிட்டேன். அவர் அவ்ளோ ஹேண்ட்சம் என்று சுந்தர் சியை நெளிய வைத்தார். சுந்தர் சி பேசுகையில், நான் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வரும்போது, எனக்கு எந்த ஆசையும் இல்லை. ஒரு வேலை பார்க்கணும். ஸ்கூட்டர் வாங்கி ஓட்டணும், மனைவி தலையில் நிறைய மல்லிப்பூ வச்சுக்கிட்டு ஸ்கூட்டர் பின்னால் அவங்களை உட்கார வச்சுக்கிட்டு பீச்சுக்கு போகணும் இதுதான் என் கனவா இருந்துச்சு. ஆனால், பெரிய அளவில் வெற்றி பெற்றாலும், அந்த சின்ன ஆசை மட்டும் எனக்கு நிறைவேறவில்லை.
விஜய் பிறந்தநாள்: வெற்றிக்கு குடும்ப பலம் மிக முக்கியம்!
முதல் காரணம், எனக்கு ஸ்கூட்டர் ஓட்ட தெரியாது. மனைவி குஷ்பூவுக்கு மல்லிப்பூ தலையில் வச்சால் அலர்ஜி வந்துரும் என்று கூறினார். முதல் படம் எடுக்கும்போதே, குஷ்பூவை மேக்கப் இல்லாமல் பார்த்தேன். கன்னம் புஸு புஸுன்னு அழகா இருந்துச்சு. அப்ப பார்த்துட்டு கடந்து போயிட்டேன். படப்பிடிப்புக்கு நடுவில் உட்கார்ந்து இருக்கும்போது நாம் கல்யாணம் செய்துகிட்டா யார் மாதிரி குழந்தை பிறக்கும்னு கேட்டேன். குஷ்பூ சிரிச்சுட்டாங்க என்று கூறினார். அவர் இயக்கிய நாயகிகள் பற்றி கூறுகையில், குஷ்பூவுக்கு புரபோஸ் பண்ணலேன்னா நடிகை சவுந்தர்யாவுக்குத்தான் புரபோஸ் செய்து இருப்பேன் என்றும் கூறினார் சுந்தர் சி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.