Tamil Serial News: 'வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல’ என படையப்பா படத்தில் நடிகர் ரஜினியைப் பார்த்து, நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் கூறுவார். இந்த டயலாக் சில நடிகைகளுக்கும் பொருந்தும். அதில் குறிப்பிடத் தகுந்தவர் நடிகை தீபா நேத்ரன்.
இதை நிரூபிக்கும் வகையில் நடிகை தீபா நேத்ரன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் படங்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக தீபாவின் மணப்பெண் அலங்கார போட்டோக்கள் இணையதளங்களில் தாறுமாறு ஹிட். கேரளாவை சேர்ந்த தீபா, சீரியல் நடிகர் நேத்திரனின் மனைவி. இவரும் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் சரவணன் மீனாட்சி சீரியல் தீபாவை பிரபலப்படுத்தியது. அந்த சீரியலில் கவினின் அம்மாவாக அவர் நடித்திருப்பார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் நன்றாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் நாச்சியாபுரம் சீரியலிலும் அம்மாவாக நடித்தார். அதோடு ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் ரக்ஷாவின் அம்மாவாகவும், சீரியல் ஹீரோ செந்திலின் மாமியாராகவும் நடித்திருந்தார். அம்மா கதாபாத்திரத்தை விட, ஹீரோவுக்கு மாமியாராக நடிக்க, ரொம்பவே யோசித்தாராம்.
தற்போது ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கிடையே முதல் பாகத்தில் அம்மா மகளாக நடித்த தீபாவும், ரக்ஷாவும் சமீபத்தில் சந்தித்திருக்கிறார்கள். அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட தீபா, ‘என் மகள் தேவிம்மா’ என கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதோடு தீபாவின் மகள்களான அபி மற்றும் அஞ்சனா உடன் போட்டோ ஷூட் நடத்தி அதையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். தீபாவின் கணவர் நேத்ரனும், மகள் அபியும் இணைந்து விஜய் டிவி-யின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலக்கியதை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சாஃப்டான, பாஸிட்டிவ் கதாபாத்திரத்தையே தேர்வு செய்யும் தீபா, நிஜத்திலும் அப்படித்தானாம்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.