Tamil Serial News: கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் சினிமாவின் போஸ்ட புரொடக்ஷன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் 60 பேர் கலந்துக் கொள்ளும் வகையில் சீரியல் ஷூட்டிங் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால் பெரும்பாலான சீரியல் நடிகர்கள் கேரளா மற்றும் பெங்களூரில் வசிப்பதால், சென்னை வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னணி சேனல்கள் தங்களது தொடர்களை நிறுத்தினார்கள். அதோடு பலர் சீரியலை விட்டு விலகியும் வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சித்தி 2 சீரியலில் அதிரடி: பொன்வண்ணன் உட்பட 4 பேர் மாற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் செந்தில்குமார். இவர் அரவிந்த் மற்றும் மாயன் என இரு கேரக்டரில் நடித்திருந்தார். மாயனின் மனைவி தேவியாக ரக்ஷா ஹோலாவும் அரவிந்தின் மனைவி தாமரையாக ராஷ்மி ஜெயராஜும் நடித்திருந்தார்கள். இருவருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர்கள் ஷூட்டிங் வந்து செல்வதற்கு தற்போது தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவருமே சீரியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி பாடலை மாஸாக வாசித்த மாற்றுத்திறனாளி இளைஞர்!
தவிர, ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் அப்படியே நிறுத்தப்பட்டு புதிதாக இரண்டாவது சீசன் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நடிகர் நடிகைகளை ஒன்று சேர்ந்து மீண்டும் சீரியலை தொடர்ந்து நடத்த பல சிக்கல்கள் நீடிப்பதால் புதிய நடிகர்களைக் கொண்டு அடுத்த சீசன் துவங்க விஜய் டிவி முடிவெடுத்திருக்கிறதம். இரண்டாவது சீசனில் செந்தில் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஹீரோயினாக சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா நடிக்கவுள்ளாராம். மற்றொரு ஹீரோயின் யார் என்பது என இன்னும் தெரியவில்லை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”