காதலை மறந்து துரை சிங்கத்தை கரம் பிடிப்பாரா ரோஜா?

இருவரும் நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் பெரும் வயது வித்தியாசம் தெரிகிறது.

இருவரும் நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் பெரும் வயது வித்தியாசம் தெரிகிறது.

author-image
WebDesk
New Update
Tamil Serial News, Vijay TV Senthoora Poove

விஜய் டிவி செந்தூர பூவே சீரியல்.

Tamil Serial News: கொரோனா ஊரடங்கு காலத்தில், சினிமா சின்னத்திரை சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே 60 பேர்களுடன் சீரியல் படபிடிப்பை நடத்த சில வாரங்களுக்கு முன் தமிழக அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து கடந்த வாரம் முதல் அனைத்து சேனல்களிலும், பழையபடி சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் பெரும்பாலான சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டு, 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.

கிளாஸியான லுக்: பிரபலங்களின் பிளாக் அண்ட் ஒயிட் சேலஞ்ச் படத் தொகுப்பு!

Advertisment

அந்த வகையில் விஜய் டிவி-யில் தினமும் இரவு 9.30 மணிக்கு ‘செந்தூரப்பூவே’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் முதன் முறையாக, சினிமாவிலிருந்து, சீரியலுக்குள் நுழைந்திருக்கிறார் ரஞ்சித். இது காதல் நிறைந்த குடும்ப சீரியல். நடுத்தர வயது (45) கொண்ட துரைசிங்கத்தைப் பற்றிய கதை. மனைவியை இழந்த இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். இவருக்கு கயல் மற்றும் கனி என்ற இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு துரைசிங்கம் மறு திருமணம் பற்றி யோசிக்கவில்லை.

சூழ்நிலைகள் காரணமாக துரை சிங்கத்தை மறுமணம் செய்து கொள்ள அவரது தாய் வலியுறுத்துகிறார். அதன் காரணமாக துரைசிங்கம் ரோஜாவைத் திருமணம் செய்துக் கொள்ள நேர்கிறது. ரோஜா, துரைசிங்கத்தின் மகள்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர். ரோஜா – துரைசிங்கம் திருமணம் நடைபெறுகிறது. அவர்கள் இருவரும் நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் பெரும் வயது வித்தியாசம் தெரிகிறது. அதையும் மீறி அவர்கள் இருவரும் எவ்வாறு வாழ்வில் இணைகிறார்கள் என்பது தான் இந்த ‘செந்தூரப் பூவே’ மெகா சீரியல்.

நலிந்த இசைக் கலைஞர்களுக்கு உதவி: ஒன்று கூடிய பாடகர்கள்!

Advertisment
Advertisements

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், துரை சிங்கத்தின் அம்மாவும், தங்கையும் ஜோசியரை பார்க்க சென்றிருக்கிறார்கள். அப்போது, ‘உங்க செல்ல பேத்தி கயல்விழியோட ஜாதக படி, உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கற யோகம் இருக்கு’ என்கிறார். அதோடு, ’அந்த பொண்ண, கயலே கூட செலக்ட் பண்ணலாம் ‘ என்கிறார். பாடம் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கு வரும் ஆசிரியை ரோஜாவிடம், பிள்ளைகள் அன்பாக இருப்பதைப் பார்த்து மொத்தக் குடும்பமும் சந்தோஷப் படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து,  ‘பேசாம அண்ணனுக்கு ரோஜாவையே கல்யாணம் பண்ணி வச்சிடலாமா?’ என்கிறார்.  ஆனால் ரோஜாவோ வேறொருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: