ஒளியிலே தெரிவது தேவதையா... தேன்மொழியா?

அப்பத்தாவுக்கு தேனையும், அருளையும் எப்படியும் சேர்த்து வாழ வச்சுடணும்னு ஆசை.

அப்பத்தாவுக்கு தேனையும், அருளையும் எப்படியும் சேர்த்து வாழ வச்சுடணும்னு ஆசை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial News, Vijay Tv Thenmozhi serial

விஜய் டிவி-யின் தேன்மொழி சீரியல்

Vijay TV, Thenmozhi BA: விஜய் டிவியின் தேன்மொழி பி.ஏ, ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற சீரியல், நேற்று முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகத் துவக்கி உள்ளது. தேன்மொழியாக ஜாக்குலின் நடித்துள்ளார். கணவன் அருளை ஹீரோ ஹீரோ சார் என்று கூப்பிடுவது ரசிகர்களுக்கு பிடித்த ஒன்று.  தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பதால், அவளை மகன் அருளுக்கு பிடிக்காமல் கல்யாணம் செய்து வைக்கும் தந்தை. அவள் காந்திநகர் காரி என்று வீட்டுக்குள் அனுமதிக்காத அம்மா. அதாவது தேன்மொழியின் மாமியார் என்று கதை நகர்ந்துக்கொண்டு இருந்த வேளையில், லாக்டவுனுக்குப் பிறகு இப்போது விட்ட இடத்தில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.

Advertisment

கிட்டதட்ட 36 ஆண்டுகள் சும்மா இல்ல பாஸ்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ’தனம்’ திரைப்பயணம்!

தேன்மொழியை பழி வாங்குகுகிறேன் என்று அவளை மட்டும் வீட்டுக்குள் வச்சு பூட்டிவிட்டோம்னு நினைச்சுட்டு போறாங்க மாமியார். தேன்மொழிக்கு அடிச்சுது அதிர்ஷ்டம். கூடவே புருஷன் அருளையும் வச்சு பூட்டிட்டு போயிட்டாங்க. அப்புறம் என்ன? ஒரு தலை காதலில் கணவன் ஹீரோ சாரோடு அழகி படத்தில் வருவது போல தனலட்சுமி ஷண்முகம் காட்சி தான். கரண்டை கட் பண்ணிட்டு போயிட்டாங்க மாமியார். மாட்டிக்கிட்ட அருளும் காற்று இல்லாமல் தவிக்கிறான். விசிறியை வாங்கி அப்போது தான் தேன்மொழிக்கும் சேர்த்து விசுருகிறான்.

Advertisment
Advertisements

தேன்மொழிக்கு காதல் பொங்கி வழியுது. ராத்திரி ஆகிப்போச்சு. இருட்டில் பயம் வந்துருது தேன்மொழிக்கு. மெழுகு வார்த்தியை ஏற்று என்று எடுத்து வந்து தருகிறான் அருள். தேன்மொழி மெழுகுவர்த்தியை ஏற்ற, அவளது முகம் ஒளியில் மிளிர்கிறது. அப்போதுதான் முதன் முதலாக தேன்மொழி ஒரு அழகியா என்று வியந்து பார்க்கிறான். ஒளியிலே தெரிவது தேவதையா என்று அழகி படத்தின் பாடலும் ஒலிக்கிறது.

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? : விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவு

ஒரு வழியா காலையில் வீட்டை பூட்டிட்டு போன அம்மா வந்துட்டாங்க,. வழக்கம் போல வீட்டு வேலைகளை செய்துக்கொண்டு இருக்கிறாள் தேன்மொழி. அப்பத்தாவுக்கு தேனையும், அருளையும் எப்படியும் சேர்த்து வாழ வச்சுடணும்னு ஆசை. அருள் வேற எப்போ பார்த்தாலும் குடிச்சுட்டு வர்றான். அவன் குடியை நிறுத்த அப்பத்தா ஒரு யோசனை சொல்றாங்க. அதாவது அருளுக்கும் தேனுக்கும் எல்லாம் முடிஞ்சுட்டா மாதிரி டிராமா போட சொல்லித் தர்ராங்க. ஃபோட்டோ ஆதாரத்தோட கச்சிதமா செய்து முடிச்சுட்டா தேன்மொழி பிஏ.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: