Advertisment

வில்லி செய்த சூழ்ச்சி: போதையில் தள்ளாடும் சுடர்; கல்யாணம் நடக்குமா?

ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Kd And Nvs

நினைத்தேன் வந்தாய் - அண்ணா

போதையில் தள்ளாடும் சுடர்.. மனோகரி செய்த சூழ்ச்சி

Advertisment

நினைத்தேன் வந்தாய்.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் எழில், மனோகரி, கனகவள்ளி மற்றும் 4 குழந்தைகள் என மொத்த குடும்பமும் ரெஸ்டாரண்ட்க்கு வந்த நிலையில் இன்று, எழிலை பார்த்த ஒருவன் என்ன சார் உங்க செட்டப் கூட வந்துட்டீங்க போல என்று அசிங்கமாக பேச எழில் அவனிடம் சண்டைக்கு செல்கிறான். பிறகு எல்லோரும் சாப்பிடாமல் வீட்டுக்கு வந்து விடுகின்றனர்.

வீட்டுக்கு வந்ததும் மனோகரியின் அப்பா அங்கு நடந்தது எதுவும் எனக்கு சரியா படல உடனடியா இவங்களுக்கு நிச்சயம் பண்ணியாக வேண்டும் என்று சொல்ல கனகவள்ளியும் அதற்கு சம்மதம் சொல்கிறாள். அதைத் தொடர்ந்து மனோகரி மற்றும் செல்வி பேசிக் கொண்டிருக்கும் போது சுடர் அங்கு வர என்னமோ கல்யாணத்தை நிறுத்திடுவேனு சவால் விட்ட.. இப்ப நிச்சயமே நடக்க போகுது என்று நக்கலாக பேசுகிறாள். 

இதை கேட்ட சுடர் கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்கிறாள். அதுமட்டுமின்றி செல்வியை இரண்டு விரலில் ஒன்று தொடு என்று சொல்ல அவளும் ஒரு விரலை தொட அச்சச்சோ என்ன செல்வி இந்த விரல தொட்டுட்ட, நிச்சயதத்தையே நிறுத்த சொல்லிட்டியே என்று ஷாக் கொடுக்கிறாள். உடனே மனோகரி இந்த சுடரை ஏதாவது செய்யணும் என்று சொல்லி ஜூஸில் சரக்கைக் கலந்து அதை செல்வியிடம் கொடுத்து அவளுக்கு எப்படியாவது கொடுத்து விடு என்று சொல்கிறாள். 

இந்த நேரம் பார்த்து ராமையா வர மனோகரி நாம குடுக்குறத விட ராமையா கொடுத்தால் தான் சரியா இருக்கும் என்று அவரிடம் கொடுத்து அனுப்புகிறாள். அதே போல் ராமையா கொண்டு வந்து கொடுத்த ஜூசை குடித்த சுடர் போதையில் தள்ளாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தாலியை எடுத்து கேம் விளையாடிய ரம்யா.. அபிராமி எடுத்த முடிவு

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபா கழுத்தில் மறுதாலி கட்ட ஏற்பாடுகள் நடந்து கடைசி நொடியில் தாலி காணாமல் போன நிலையில் இன்று, வீடு முழுக்க தாலியை தேடுகின்றனர், நல்ல நேரம் முடிந்து விட அய்யர் இனிமே தாலி கிடைச்சாலும் பயன் இல்ல என்று சொல்ல மைதிலி தாலி எங்க இருக்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்லி ரம்யா தான் எடுத்து இருப்பா என்று கையை காட்டுகிறாள். 

ரம்யா ஆமாம் தாலி என்கிட்டே தான் இருக்கு அதிர்ச்சி கொடுக்கும் ரம்யா தீபா கல்யாணமான போது எப்படி மருமகளா இந்த வீட்டிற்கு வந்தாலோ அதே மாதிரி எல்லாம் ஆரம்பத்தில் இருந்து நடக்கணும்னு ஆசைப்பட்டா அதுக்காக தான் இப்படி பண்ணேன் என்று சொல்ல தீபாவும் ஆமாம் எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு, ஆனால் ரம்யா இப்படி செய்வான்னு எதிர்பார்க்கல என்று சொல்கிறாள். 

அபிராமி தீபா ஆசைப்படியே செய்து விடலாம் என்று சொல்ல தர்மலிங்கத்திற்கு ஜோசியர் சொன்னது நினைவுக்கு வர அவர் எதுக்கு அதெல்லாம் பண்ணனும்? அவ கழுத்தில் தான் மஞ்ச கயிறு இருக்கே அதை அப்படியே விட்டுடலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா ஏன் கல்யாணம் பண்ணா செலவாகும்னு யோசிக்கிறீர்களா என்று கேள்வி கேட்க அபிராமி இடையில் புகுந்து பணத்தை பத்தி எல்லாம் நீங்க கவலையே படாதீங்க என்று சொல்கிறாள். 

இருந்தாலும் தர்மலிங்கம் வேண்டாம் என்று தடுக்க முயற்சி செய்ய முடியாமல் போக அடுத்து ஜானகி எதுக்கு வேண்டாம் என்று சொல்றீங்க என்று கேட்டதும் ஜோசியர் சொன்ன விஷயத்தை சொல்ல அபிராமி இதை பின்னாடி நின்றிருந்தது கேட்டு விடுகிறாள். பிறகு இவ்வளவு தான் விஷயமா அதெல்லாம் கவலைப்படாதீங்க. இந்த கல்யாணம் நடக்கணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment