Pandian Stores ActressSaravana Vickram Lifestyle : தற்போதைய காலகட்டத்தில் சினிமாவை விட சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு அளித்து வருகின்றனர். நாள்தோறும் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களையும் ரசிகர் ரசிகைகளாக மாற்றியுள்ளது என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் நாள்தோறும் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் நடிகர்களில் ஒருவர் சரவண விக்ரம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் கடைசி தம்பியாக மக்களின் மனதில் நின்ற கண்ணன், தற்போது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
ஆனாலும் சமீபத்தில் லக்ஷ்மி அம்மா இறந்த சீனுக்காக உண்மையிலேயே இவர் மொட்டை அடித்து நடித்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. மேலும் இந்த சீரியலுக்காக இவர் செய்த்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.ஆந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள சரவண விக்ரம் தமிழகத்தின் தென்மாவட்டத்தை சேர்ந்தவர். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை திருச்செந்தூரில் முடித்துள்ளார்.
இவரின் அப்பா பிரபல மினரல் கம்பெனியில் ஜிஎம் ஆக உள்ளார். அப்பாவின் பேச்சை தட்டாத பிள்ளையான சரணவ விக்ரம், இன்ஜீனியரிங் முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க பெற்றோர் சம்மத்ததுடன் சென்னை வந்துள்ளார். இங்கு ஏராளமான குறும்படங்களில் நடித்த அவருக்கு, விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கொண்டுத்தது. சின்ன தம்பி சீரியலில் நில எபிசோடுகள் நடித்திருந்தாலும், அவரின் சிறந்த நடிப்பை பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ்சில் கடைக்குட்டி கண்ணன் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன்களின் பேச்சை கேட்டு நடக்கும் தம்பியாக வரும் சரவண விக்ரம் தனது ரியல் லைப்பிலும், பெற்றோர் பேச்சை கேட்டு நடக்கும் பிள்ளையாகவே இருந்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது. தற்போது சென்னையில் இருக்கும் சரவண விக்ரம், ஷூட்டிங் இல்லாத நேரத்தில் சொந்த ஊருக்கு சென்று, குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு செலவிட்டு பின்பு சென்னைக்கு வந்து விடுவாராம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil