/tamil-ie/media/media_files/uploads/2021/04/pndian-Stores2.jpg)
சின்னத்திரை ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம், சகோதரர்களின் பாசம் ஆகியவற்றை மையமாக வைத்து குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.
அதிலும் இந்த சீரியலுக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து மற்ற மொழிகளிலும் இதை ரீமேக் செய்துள்ளனர். தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் இந்த சீரியல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் 3-வது மருமகள் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ராவின் திடீர் மரணம் சீரியல் ரசிகர்களிடைபே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை அதில் இருந்து மீளாத ரசிகர்கள் அவ்வப்போது சித்ரா குறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/pndian-Stores1.jpg)
தற்போது முல்லை கதாப்பாத்திரத்தில் காவிய அறிவுமணி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகை கடை வியாபாரத்தை அவ்வளவாக இல்லாத நிலையில், வியாரத்தை பெருக்க என்ன செய்யலாம் என குடும்பத்தினர் யோசித்து ஒரு வழியாக டோர் டெலிவரி, குலுக்கல் என வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சில விஷயங்களை செய்து மீண்டும் கடைக்கு அதிகம் கஸ்டமர் வர தொடங்கி இருக்கிறார்கள்.
இதனால் தற்போது பண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்து வரும் நிலையில், இப்போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், 600 எபிசோடுகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த புதிய மைல்கல்லை எட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவுக்கு, ரசிகர்களும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சித்ராவை மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.