/indian-express-tamil/media/media_files/h7u3nWDrt1plkg51AH3d.jpg)
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2
சின்னத்திரையின் முக்கிய சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், விரைவில் இதன் 2-ம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் பல புதுமுகங்கள் களமிறங்கியுள்ளனர்.
விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசம், கூட்டுக்குடும்பம் உள்ளிட்ட குடும்பத்தின் முக்கிய தேவைகளை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நேற்றுடன் இந்த சீரியல் தனது 5-ஆண்டு பயணத்தை முடித்துக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 30-ந் தேதி முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பபை தொடங்க உள்ளது. முதல் சீசனில் மூர்த்தியாக நடித்த ஸ்டாலின் முத்து மட்டுமே 2-வது சீசனில் நடித்து வருகிறார். மற்றபடி அனைவரும் புதுமுகங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த சீரியலில் முன்னாள் நட்சத்திர நடிகை நிரோஷா மூர்த்தியின் மனைவியாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து விஜே கதிர், வசந்த் வசி, ஆகாஷ் பிரேம்குமார், சத்ய சாய் கிருஷ்ணா என புதுமுகங்கள் நடித்துள்ள இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் பிரபல வில்லன் நடிகர் அஜய் ரத்னம் நடிக்க உள்ளார். இவர் இந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஜய் டிவியின் கதாநாயகி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷாலினி நாயகியாக நடிக்க உள்ளார். அவருடன் ஹாசினி ரிஹானா, ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர்.
புதிய கதைக்களத்துடன் புதுமுக நடிகர்களுடன் வெளியாக உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ப்ரமோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சீரியல் மீதாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.