ஜனார்த்தன் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம்... மூர்த்திக்கு வந்த சோதனைய பார்த்தீங்களா...!

Tamil Serial Rating : அடுத்தடுத்த எபிசோடுகள் பரபரப்பாக இருக்கும் என்றும், முல்லை ஐஸ் சண்டையை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாகவும் கூறி வருகினறனர்.

Tamil Serial Rating : அடுத்தடுத்த எபிசோடுகள் பரபரப்பாக இருக்கும் என்றும், முல்லை ஐஸ் சண்டையை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாகவும் கூறி வருகினறனர்.

author-image
WebDesk
New Update
ஜனார்த்தன் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம்... மூர்த்திக்கு வந்த சோதனைய பார்த்தீங்களா...!

Tamil Serial Pandian Stores Rating Update : சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான பல சீரியல்கள் உள்ளன. அவற்றின் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisment

4 சகோதரர்கள், கூட்டுக்குடும்பம் ஒரு மளிகை கடை இவை அனைத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அடையாளம் என்று சொல்லலாம். குடும்பத்தினரின் பேச்சை மீறி தனக்கு பிடித்தமான ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததுகொண்ட கண்ணன் தற்போது வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் அவரது மனைவி ஐஸ்வர்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் தலைவலியாக மாறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, ஜீவா மீனா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மூர்த்தி தனம் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் நமக்கு குழந்தை இல்லையே என்ற எண்ணம் முல்லைக்கு தொற்றிக்கொண்டது. கடந்த சில எபிசோடுகளாக இவர் அதையே நினைத்து புலம்பிக்கொண்டிருக்கிறார். இதனால் அடுத்த எபிசோடுகளில் முல்லை கர்ப்பமாக சான்ஸ் நிறையவே உள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக சமான் எடுக்க கண்ணனை சொல்லும்போது, கதிர்மாமா வை எடுக்க சொல்லுங்க என்று ஐஸ்வர்யா கூறியது ரசிகர்களுக்கே சற்று அதிர்ச்சியர்கத்தான் இருந்தது.

அன்றிலிருந்து ஐஸ்வர்யாவை கண்டாலே முல்லை எரிந்து விழ தொடங்கியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு பற்றிக்கொண்டுள்ள நிலையில், முல்லைக்கு முன்பு ஐஸ்வர்யா கர்ப்பம் என்று சீரியலை இழுத்துவிடுவார்களோ என்ற எண்ணமும் ரசிகர்கள் மனதில் எழாமல் இல்லை. இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பொங்கல் கொண்டாட்டத்திற்காக ஜனார்த்தன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

Advertisment
Advertisements

அங்கு பொங்கல் வைக்கும்போது சடனாக எண்ட்ரி கொடுக்கும் ஜனார்த்தனின் அண்ணன் மகன் கைலாஷ், ஜீவா கதிரை பெயர் சொல்லி அழைப்பது போல மூர்த்தியையும் பெயர் சொல்லி கூப்பிடுகிறார். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மட்டுமல்ல ஜனார்த்தன் குடும்பத்தினரே அதிர்ச்சியாகின்றனர். அப்போது கதிர் மூர்த்தி இல்லை மூர்த்தி மாமா என்று சொல்கிறார். இதனால் பொங்கல் பண்டிஐகு என்ற பெயரில் ஜனார்த்தன் குட்டையை குழப்ப போகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் அடுத்தடுத்த எபிசோடுகள் பரபரப்பாக இருக்கும் என்றும், முல்லை ஐஸ் சண்டையை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாகவும் கூறி வருகினறனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: