Vijay TV Serial : காருக்கு பதிலாக குட்டி யானை... குடும்பத்தினர் ஹேப்பி... கடுப்பில் மீனா

Tamil Serial Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்

Tamil Serial Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : காருக்கு பதிலாக குட்டி யானை...  குடும்பத்தினர் ஹேப்பி... கடுப்பில் மீனா

Pandian Stores Serial Today Episode : கார் வாங்க சென்ற மூர்த்தியும், ஜீவாவும் குட்டி யானையுடன் வந்து வீட்டு வாசலில் நிற்க மீனா, முல்லை, கண்ணன் மூவரும் கார் எங்கே என்று கேட்கின்றனர். அதற்கு ஜீவா இதுதான் நம்ம வண்டி என்று சொல்ல காமெடி பண்ணாதீங்க, விளையாட்டுக்கு தான சொன்னீங்க என கேட்கின்றனர். ஆனால் ஜீவா பொய்ல சொல்லலாம் உண்மையாவே இதான் நம்ம வண்டி என சொல்கின்றனர்.

Advertisment

இதனால் கடுப்பாகும் அவர்கள் கார் என்று ஆசையோடு வந்தோம் என்று சொல்லிட்டு கோபமாக உள்ளே செல்கின்றனர். அப்போது வரும் தனம் வண்டி ரொம்ப நல்லா இருக்கு மாமா. சீக்கிரமே அவுங்களும் புரிஞ்சுப்பாங்க என சொல்கிறாள். இதன்பிறகு ரூமிற்கு வரும் ஜீவாவிடம், கார் வாங்குறேன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டு, இப்போ குட்டி யானை வாங்கிட்டு வந்து இருக்கீங்க. நான் எங்க வீட்ல கூட வேற கார் வாங்க போறோம்னு சொல்லி வச்சேன். இப்போ அவுங்க கிட்ட எல்லாம் என்ன சொல்ல போறேன் என கோபமாக கத்துகிறாள்.

அதற்கு ஜீவா எவ்வளவு சொல்லியும் மீனா சமாதானம் ஆகாததால் ரூமை விட்டு வெளியில் வருகிறார். அப்போது மூர்த்தி, மெதுவா மீனா புரிஞ்சுப்பா என சொல்கிறான். இதனையடுத்து அவர்கள் அனைவரும் தூங்க சென்ற பிறகு குடோனுக்கு செல்லும் ஜீவா வண்டிக்கு நேம் போர்டு மாற்றிவிட்டு, வண்டியில் மெத்தை எல்லாம் போட்டு செய்த பின்னர் வீட்டுக்கு வந்து ஹாலில் தூங்கும் ஜீவாவை விடிந்ததும் மீனா எழுப்புகிறாள்.

அப்போது அவளை வெளியே அழைத்து வந்து வண்டியை ரெடி பண்ணியதை காண்பிக்கிறான். அதற்கு மீனா இந்த வண்டிக்கு இதெல்லாம் ஓவர்டா. உங்களுக்கு எல்லாம் எப்படி இந்த ஐடியா வருதோ திட்ட, நைட் புல்லா தூங்காம ஐந்து மணிநேரம் முழுச்சு இருந்து இதெல்லாம் பண்ணேன் என ஜீவா சொல்கிறான். தொடர்ந்து தனத்தை கூப்பிடும் ஜீவா, வண்டியின் செட்டை காண்பிக்கிறான். அதை பார்த்த தனம் சூப்பரா இருக்குடா. நீதான் இதெல்லாம் பண்ணியா என ஆச்சரியமாக கேட்கிறாள்.

Advertisment
Advertisements

அதன்பின்னர் அவள் வீட்டிலிருக்கும் அனைவரையும் அழைத்து காமிக்க, எல்லாரும் பார்த்து சூப்பரா இருக்கு என பாராட்டுகின்றனர். அப்போது மீனா மொத்த குடும்பமே இப்படி தான் போல. இதெல்லாம் பார்க்க முடியலைடா சாமி என மனதிற்குள்ளே நினைத்து கொள்கிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: