Tamil Serial Pandian Stores Serial Episode : தனம் வளைகப்பிற்காக வந்த பிரபலங்கள் சென்ற பிறகு நலங்கு வைக்கும் நிகழ்வு ஆரம்பம் ஆகிறது. முல்லை அம்மா சரஸ்வதி நலங்கு வைத்து துவங்கி வைக்கிறார். அனைவரும் நலங்கு வைக்க மூர்த்தி அம்மா மேடைக்கு செல்ல தயக்கம் காட்டுகிறார். ஆனால்அனைவரும் வற்புறுத்தி அவரை நலங்கு வைக்க சொல்கின்றனர். அதன்பின்னர் கண்ணன் அம்மாவை மேடைக்கு அழைத்து வந்த பிறகு, அவர் நலங்கு வைக்கிறார்.
இதனிடையே பிரசாந்த் சொல்ல மல்லி தனது பக்கத்தில் நிற்கும் ஐஸ்வர்யாவை, பிரஷாந்த் பக்கத்தில் நிற்க சொல்கிறாள்ஐஸ்வர்யா பக்கத்தில் வந்ததும் சந்தோஷப்படும் பிரஷாந்த் ஒரு செல்பி எடுத்துகலாம் என்று சொல்கிறான். ஆனால் ஐஸ்வர்யா அதனை கண்டுகொள்ளாமல் நிற்கிறாள். இதனால் கோபமாகும் பிரசாந்த் அமைதி நிற்க்க, அனைவரும் மூர்த்தி, தனத்திற்கு சீர் செய்கின்றனர்.
அப்போது ஐஸ்வர்யாவிடம் அறையில் சென்று பை ஒன்றை எடுத்து வருமாறு கஸ்தூரி, சொல்கிறாள். அப்போது தனது பக்கத்தில் வரும் ஐஸ்வர்யா மீது பூக்களை தூக்கி போடுகிறான் கண்ணன். அதை பார்க்கும் பிரசாந்த் கோபமாகிறான். அதனை தொடர்ந்து இருவரும் கண்களாலே பேசி கொண்டு சிரிப்பதையும் பார்க்கும் பிரஷாந்த் கடுப்பில் என்ன செய்வது எனறு தெரியாமல் நிற்கிறான். இதற்கிடையே மூர்த்த தனத்திற்கு கொடுக்க ஆசைப்பட்ட நகையை கதிர் வாங்கி வர, மூர்த்தியை தனியாக அழைத்து வந்து கதிரும் ஜீவாவும், அவன் கையில் நகையை கொடுக்கிறார்கள். இதை பார்த்து மூர்த்தி சந்தோஷமடைகிறான்.
அதனை தொடர்ந்து மூர்த்தி அந்த நகையை தனத்திற்கு போட்டு விடுகிறான். அதன்பிறகு ஒருபுறம்கதிலு முல்லை ரொமான்ஸ் செய்ய மறுபுறம் ஜீவா மீனா ரொமான்ஸ் ஓடுகிறது. இவர்களை காலாய்க்கும் கண்ணன், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு முக்கியமான விருந்தினர் வருகிறார் அவரை பார்த்தால் எல்லாரும் சந்தோஷப்படுவீங்க என சொல்கிறான். அதனை தொடர்ந்து விருந்தினரை வரவேற்க ஜீவா, கதிர் இருவரும் மனைவிகளுடன் செல்ல செப் தாமு காரில் வந்து இறங்குகிறார். அவரை பார்த்து சந்தோஷமடையும் தனம், உங்க சமையலை பார்த்து தான் நான் சமைக்கவே கத்துக்கிட்டேன் என சொல்கிறாள்.
அதன்பின்னர் தாமு உனக்காக நான் ஏதாவது சமைச்சு கொடுக்கணும் ஆசைப்படுறேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லும்மா என கேட்கிறார். அதனை தொடர்ந்து தனம் மாங்கா வெள்ளை பச்சடியை கேட்க, தாமு அதை சமைத்து கொடுக்கிறார். அவரது சாப்பாட்டை அனைவரும் பாராட்டுகின்றனர். கஸ்தூரி கர்ப்பிணி பெண், குழந்தை பிறந்த பொண்ணுங்க என்னலாம் சாப்படலாம் சொல்லுங்க என கேட்கிறாள். அதற்கு பதில் சொல்லும்போது இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil