/tamil-ie/media/media_files/uploads/2021/07/Pandian-Stores-11.jpg)
Pandian Stores Serial Today Episode : விஜய் டிவியை சார்ந்த பிரபலங்கள் வருகை தந்த தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன், நிகழ்கிறது. இதற்கிடையே ஐஸ்வர்யாவை பார்க்கும் கண்ணன், அவளுக்கு ரோஜாப்பூ கொடுக்கிறான். அவளும் சிரித்து கொண்டே வாங்கும்போது பிரசாந்த், பார்த்துவிடுகிறான். அதன்பிறகு அவன் கோபத்துடன் சென்றுவிட, வளைகாப்பு முடிந்த பிறகு தனத்தை கிளம்பலாம் என அழைக்கின்றனர்.
நல்ல நேரம் முடிய போகுது, இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும் என்கின்றனர். அதன்பின்னர் தனம் அனைவரிடமும் போய்ட்டு வரேன் என்று சொல்ல அனைவரும் சோகத்தில் மூழ்கின்றனர். இதில் ஜீவா பங்ஷன் நடக்கும் போது ஜாலியா இருந்துச்சு. இப்போ ஒரு மாதிரி இருக்கு என சொல்கிறான். மீனாவும் போகாதீங்க அக்கா என சொல்லி அழுகிறாள். முல்லையிடமும் எல்லாத்தையும் பார்த்துக்கோ என சொல்கிறாள்.
தொடர்ந்து கண்ணனிடம் போயிட்டு வர்றேன் என சொல்லும் போது, அவன் நானும் உங்ககூடவே வந்துடவா அண்ணி என கேட்கிறான். அப்போது அவள் கொஞ்ச நாள் தான, சீக்கிரம் வந்துடுவேன் என சொல்கிறான். அதன்பிறகு தனம் கதிரிடம் பத்திரமா இருடா என சொல்லும் போது, அவன் நீங்க பத்திரமா இருங்க என சொல்லி கண் கலங்குகிறான். அப்போது தனம் நீங்க எல்லாரும் இப்படி அழுதா, நான் எப்படிடா போவேன் என சொல்கிறாள்.
ஆனால் தனத்தின் அம்மாவும் அண்ணனும்,நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னாடி கிளம்புவோம் தனம் என சொல்லி அழைத்து செல்கிறார்கள். அப்போது தனத்தின் கையை பிடித்துக்கொண்டு அண்ணி ப்ளிஸ் எங்களை விட்டு போகாதீங்க அண்ணி என அழுகிறான். அதற்குதனம், நான் எப்படிம்மா இவுங்கள எல்லாம் விட்டுட்டு வருவேன். நான் இங்கயே இருக்கேன் என சொல்கிறாள்.
பிரசவம் வரைக்கும் நீ என்கூட இரும்மா. நான் இப்படி இவுங்கள எல்லாம் விட்டுட்டு வர முடியாது என சொல்கிறாள். அவள் அம்மாவும் அதற்கு ஒப்பு கொள்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவக்கு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.