Pandian Stores Serial Today Episode Update : கல்யாணத்திற்கு தயாரான கண்ணன் ஜெராக்ஸ் எடுக்க வரும்போது ஜீவா அவனை பார்த்துவிடுகிறான். அப்போது அவனை அழைத்து தப்பு செய்து விட்டு வெளியில சுத்திட்டு இருந்தா சரி ஆகிடாது வீட்டுக்கு போ என்று சொல்கிறான். அதை கேட்டு கண்ணன் சரினே என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்படுகிறான். ஆனால் ஜீவா அங்கிருந்து கிளம்பியவுடன் கண்ணன் மீண்டும் ஜெராக்ஸ் கடையில் நுழைகிறான்.
இதற்கிடையே கண்ணனை அடித்தது குறித்து தனம் வீட்டில் புலம்பிக்கொண்டிருக்க முல்லை அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். அதற்கு தனம் இவ்ளோ நேரம் அவன் வீட்டுக்கு வராம இருக்குறதே ஒரு மாதிரி இருக்கு என்று சொல்கிறாள். அதற்கு முல்லை நீங்கதா அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க, பசிச்சா தானா வருவான் எனறு சொல்கிறாள். இதற்கிடையே வீட்டில் ஐஸ்வர்யாவை காணோம் என்று கஸ்துரியும் ஜெகாவும் தெரிந்தவர்களிடம் போன் செய்து கேட்கின்றனர்.
அப்போது அங்கு வரும் மல்லியும் பிரஷாந்தும் என்ன ஆச்சி என்று கேட்கின்றனர். அப்போது கஸ்தூரி ஐஸ்வர்யா வீட்டில் இல்ல மல்லி, எங்கேயோ போய்ட்டா என்று சொல்ல பிரஷாந்த் அதிர்ச்சியாகிறான். அப்போது மல்லி அவ இங்கதான் எங்கயாவது போய்ருப்பா என்று சொல்ல, அதற்கு பிரஷாந்த் அய்யோ சித்தி உங்களுக்கு விஷயமே தெரியல அவ கொஞ்சம் கேப் கெடச்சாலும் கண்ணன பாக்க போய்டுவா என்று சொல்கிறான்.
அதற்கு மல்லி எந்த கண்ணன் என்று கேட்க, எல்லாம் தனம் வீட்டு கண்ணன்தன் அவனாலதா தம்பி சீக்கிரமா கல்யாணத்தை வச்சிது என்று சொல்கிறாள். இதை கேட்டு மல்லி அதிர்ச்சியாகிறாள. அதன்பிறகு அவ கண்ணனனதா பாக்க போய்ருக்கான இந்த பிரஷாந்த் யாருனு இன்னைக்கு தெரியும் அவனுக்கு என்று சொல்லிவிட்டு செல்கிறான். அதன்பிறகு இங்க என்ன நடக்குது எனக்கு ஒன்னுமே புரியல என்று மல்லி கேட்க கஸ்தூரி நடந்த அத்தனையும் சொல்கிறாள். இதை கேட்டு மல்லி அதிர்ச்சியாகிறாள்.
அதன்பிறகு பிரஷாந்த் ஊர் முழுக்க தேட, கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் நண்பர்களுடன் காரில் சென்றுகொண்டிருக்கிறனர். இதனிடையே தனம் வீட்டிற்கு வரும் கஸ்தூரி ஐஸ்வர்யாவை காணோம் என்று சொல்லி சண்டை போடுகிறாள். ஆனால் தனம் குடும்பத்தினர் கண்ணனுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் அவன் ஐஸ்வர்யாவிடம் பேசுவது இல்லை என்று சொல்ல, இன்னைக்கு காலைல கூட அவளுக்கு போன் பன்னான், நான் முல்லைகிட்ட சொன்னேன் என்று கஸ்தூரி சொல்ல அனைவரும் முல்லையை பார்க்கின்றனர்.
இதன்பிறகு கண்ணனுக்கு மீனா போன் பண்ண போன் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் கஸ்தூரி மேலும் சண்டை போடுகிறாள். அதன்பிறகு கண்ணன் அப்படி பட்ட ஆள் இல்ல அவன் அப்படி செய்ய மாட்டான் என்று தனம் சொல்கிறாள். இதற்கிடையே அவர்கள் இருவரையும் பிரஷாந்த் தேடி அலைய அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil