Tamil Serial Pandian Stores Today Episode Update : கல்யாணம் பண்ணிக்கிட்ட கண்ணன், இந்த வீட்டுக்குள் வந்தால் அடுத்த நிமிஷமே நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிருவேன் என மூர்த்தி சொல்ல, அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். அதன்பிறகு இங்க நிற்காத போடா என மூர்த்தி விராட்ட, வா மாமா போவோம் என ஐஸ்வர்யா கண்ணனை அழைக்கிறாள். அப்போது கஸ்தூரி, மாமாவாம்ல. மானம் கெட்டவளே. அங்க வந்து ஒட்டிக்கலாம்ன்னு நினைச்சுக்காத என் சொல்லும் கஸ்தூரி, நீங்க எடுத்த முடிவு தான் அண்ணே சரி என சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறாள்.
அதன்பின்னர் மூர்த்தி இனிமேல் நீ ஒரு நிமிஷம் இங்க நின்னாலும் நான் உயிரோட இருக்க மாட்டேன்டா என்று சொல்லிவிட்டு அனைவரையும் உள்ளே போக சொல்லிகிறான். அதன்பிறகு மூர்த்தியும் வீட்டிற்குள் சென்று கதவை அடைக்கிறான். இதை பார்த்து அழும் கண்ணனை ஆறுதல் சொல்லி, அழைத்து செல்கிறாள் ஐஸ்வர்யா. அதன்பிறகு வீட்டிற்குள் அனைவரும் அமைதியான இருக்க, லஷ்மி, பழைய நியாபகத்தில் கண்ணன் என்னை உள்ள கூட்டிட்டு போடா என சொல்கிறாள்.
இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியாக, அப்போது கதிர் அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். எப்படிடா அவன் நம்ம எல்லாரும் வேணாம்ன்னு முடிவு பண்ணான் என கேட்கிறான். அப்போது மீனா, அவன் வேணாம்ன்னு முடிவு பண்ணீட்டீங்களே அவன் விரும்புன பொண்ண அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அவ்ளோதான என கேட்கிறாள். இதை கேட்டு அனைவரும் அவளை அதிர்ச்சியுடன், தப்புதான் அவன் பண்ணது தப்புதான், இதுக்காக அவனை வீட்டை விட்டு அனுப்புறது எல்லாம் ரொம்ப ஓவர் மாமா என சொல்கிறாள்.
இதை கேட்ட லஷ்மி, சும்மா இரு மீனா. எனக்கு இனிமேல் மூனு மகன், மருமகள் தான். கண்ணனை நான் தலை முழுங்கிட்டேன் என சொல்கிறாள். இதன்பிறகு அவளை உள்ளே அழைத்து செல்லும் கதிரிடம், அவன் ஏன்டா இப்படி செய்தான் என்று அழுது புலம்புகிறாள். மேலும் அவனை இனிமேல் வீட்டிலேயே சேர்க்க கூடாது என்று சொல்கிறாள். இதற்கிடையில் மாலையும் , கழுத்துமாக கண்ணனும், ஐஸ்வர்யாவும் என்ன செய்வதென்று தெரியாமல் தெருவில் நிற்கின்றனர்.
அப்போது கண்ணன், வீட்டை விட்டு அனுப்புவாங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை. அண்ணன் திட்டும், கோபப்படும்ன்னு மட்டும் தான் நினைச்சேன் என புலம்புகிறான். அப்போது சதீஷ், என் வீட்டு பக்கத்துல இருந்த சொந்தகாரங்க வீடு காலியா இருக்கு. இப்போதைக்கு அங்க போய் இருக்கலாம். அப்புறம் என்ன பண்ணலாம்ன்னு பார்த்துக்கலாம் என சொல்லி அழைத்து செல்கிறான். இதற்கிடையில் தனம் சோகமாக இருப்பதை பார்த்து அவள் அம்மா, இந்த மாதிரி நேரத்துல இப்படி இருந்தா எப்படி? நம்ம வீட்டுக்கு கூப்பிட்டாலும் வர மாட்றா. ஒழுங்கா சாப்பிட வா என சொல்கிறாள்.
அப்போது அங்கு வரும் மூர்த்தியிடம் புலம்பும் தனம் அம்மா, எல்லாரும் இப்படி இருந்தா எப்படி மாப்பிள்ளை. கயல் பாப்பா கூட சாப்பிடலை என கத்துகிறாள். அதன்பிறகு மூர்த்தி இனிமேல் யாரும் அவனை பற்றி இந்த வீட்ல பேசக்கூடாது. அவனுக்காக அழுதது எல்லாம் போதும் என சொல்கிறான். எல்லாரும் சாப்பிடுங்க என சொல்ல அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.