Vijay TV Serial : மூர்த்தி வீட்டில் சத்தம் போடும் கஸ்தூரி : வசமாக சிக்கிய கண்ணன்

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்போமா?

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்போமா?

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : மூர்த்தி வீட்டில் சத்தம் போடும் கஸ்தூரி : வசமாக சிக்கிய கண்ணன்

Pandian Stores Today Episode Update : கதிருக்காக வைத்த பேனர் முன்பு குடும்பத்துடன் போட்டோ எடுக்கின்றனர். அப்போது கண்ணனுக்கு போன் செய்யும் ஐஸ்வர்யா இப்போதே பார்க்க வேண்டும் என்று வற்புறுத்த, வேறு வழி இல்லாமல் கண்ணனும் அவளை பார்க்க செல்கிறான். கண்ணனை சந்திக்க வீட்டில் இருந்து கிளம்பும் ஐஸ்வர்யாவிடம், கஸ்தூரி எங்க்கேயும் போக வேண்டாம் என்று சொல்கிறாள்.

Advertisment

அதற்கு ஐஸ்வர்யா, நான் நோட்ஸ் வாங்கனும் என பிடிவாதமாக சொல்லி கிளம்புகிறாள் ஐஸ்வர்யா. அவள் போனபிறகு அவள் எங்கு செல்கிறாள் என்று நோட்டம் பார்க்க கஸ்தூரி பின்னாடியே செல்கிறாள். அப்போது கண்ணனும், ஐஸ்வர்யாவும் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது கஸ்தூரி, அவர்களை பிடித்து அடிக்க தொடங்குகிறாள்.

அதன்பிறகு கண்ணனிடம் இவளை கல்யாணம் பண்ண உனக்கு என்னடா தகுதி இருக்கு என கேட்கிறாள். ஐஸ்வர்யாவிடம், இவன போயா லவ் பண்ற. இன்னும் அண்ணிங்க முந்தானையை பிடிச்சுட்டு சுத்துறான். இருடா இது எல்லாத்துக்கும் முடிவு கட்றேன் என சொல்லி ஐஸ்வர்யாவை வீட்டிற்கு இழுத்து கொண்டு செல்லும் கஸ்தூரி’, அங்கு வீட்டில் உள்ளவர்களிடம் நடந்ததை பற்றி கூறுகிறாள்

இதனிடையில் மூர்த்தி வீட்டில் அனைவரும் உட்கார்ந்து சந்தோஷமாக பேசி பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு வரும் ஜனார்த்தன் கதிருக்கு மாலை போட்டு, சால்வை அணுவித்து வாழ்த்துகிறான். ஊர் முழுக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றி தான் ஒரே பேச்சு என சொல்லி வாழ்த்துகிறான் என் சொல்லிவிட்டு கிளம்புகிறான். அவர்கள் போன பிறகு அங்கு வரும் கஸ்தூரி, தனத்திடம் வீட்ல பிள்ளைய வளர்த்து வைச்சு இருக்கியா இல்லை பொறுக்கியா வளர்த்து வைச்சு இருக்கியா என சத்தம் போடுகிறாள்.

Advertisment
Advertisements

அதற்கு தனம் இப்போ என்ன ஆச்சி எதுக்கு கத்துரீங்க என்று கேட்க, என் வீட்டு பொண்ணை வாழ விடாம, போன் போட்டு கூப்பிட்டு பேசிட்டே இருக்கான் இந்த கண்ணன் என சொல்கிறாள். அப்போது அவன் அம்மா கண்ணன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான் என சொல்ல, வேணும்னா இப்போ யாரை பார்த்துட்டு வர்றான்னு கேளுங்க என்று கஸ்தூரி சொல்கிறாள். இதனால், அனைவரும் அதிர்ச்சியுடன் கண்ணனை பார்க்கின்றனர். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசொடு

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: