Tamil Serial Rating : இப்படி மாட்டிங்கிட்டீங்களே பாரதி ... இதெல்லாம் யோசிக்க வேண்டாமா?

Tamil Serial Update : இன்றைய எபிசோட்டில் ஒரு பாட்டியம்மா பூ கொடுக்க அதை பாரதி வீட்டில் வைக்கிறான். இதை கண்ணம்மா தலையில் எடுத்து வைத்து்ககொள்கிறாள்

Tamil Serial Update : இன்றைய எபிசோட்டில் ஒரு பாட்டியம்மா பூ கொடுக்க அதை பாரதி வீட்டில் வைக்கிறான். இதை கண்ணம்மா தலையில் எடுத்து வைத்து்ககொள்கிறாள்

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : இப்படி மாட்டிங்கிட்டீங்களே பாரதி ... இதெல்லாம் யோசிக்க வேண்டாமா?

Bharathi Kannamma Serial Rating Update With promo : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இடையேயான காட்சிகள் சளிப்பை ஏற்படுத்தும் விதமா அமைந்துள்ளது. கண்ணம்மா கதாப்பாத்திரம் மாற்றப்பட்டு விணுஷா தேவி நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும், சீரியலுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி வந்த வில்லன் கதாப்பாத்திரமான வெண்பா இன்னும் ஸ்கிரீனுக்கு வரவில்லை.

Advertisment

இதன் காரணமாக சீரியலில் அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசிக்க இயக்குநர் மறந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். வெண்பா கதாப்பாத்திரம் சிறைக்கு சென்றதில் இருந்து பாரதி கண்ணம்மாவின் கோர்ட் சீன் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகு வந்த காட்சிகள் அனைத்து பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வந்துகொண்டிருக்கும் எபிசோடுகள் குறித்து ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிவிடலாம்.

அது என்னவென்றால் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா என இரண்டு முன்னணி கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், வெண்பா இல்லை என்றால் இவர்கள் இருவருக்கு வேலை இல்லை என்று சொல்லும் அளவுக்குதான் சீரியல் உள்ளது. தற்போது கோர்ட் உத்தரவின்படி பாரதி கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தாலும்,இந்த எபிசோடுகள் விறுவிறுப்பை ஏற்படுத்த தவறிவிடுகின்றன.

ஏற்கனவே இவர்கள் இருவரும் வரும எபிசோடுகள் காமெடியாக உள்ளது. இதற்கு மேலும் காமெடியை அதிகரிக்கும் வகையில், அறந்தாங்கி நிஷாவை உள்ளே இழுத்துளளனர். ஏற்கனவே காமெடியாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் இவர் வந்த பிறகு மேலும் காமெடியாக சென்று கொணடிருக்கிறது. இடையில் கண்ணம்மா மீது பாரதி அவ்வப்போது கோபபட்டாலும் அதுவும் காமெடியாக மாறிவிடுகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஒரு பாட்டியம்மா பூ கொடுக்க அதை பாரதி வீட்டில் வைக்கிறான். இதை கண்ணம்மா தலையில் எடுத்து வைத்து்ககொள்கிறாள். அதன்பிறகு நடிகர் பாக்யராஜை நினைவூட்டும் வகையில், பாரதிக்கு முருங்கைக்காய் சமைத்து கொடுக்கிறாள் கண்ணம்மா இதை சாப்பிடும் பாரதி இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறார். அப்படியே கண்ணமமாவை தொட போக அதன்பிறகு இவர் துரோகம் செய்தவள் என்று எண்ணிஅப்படியே இருந்துவிடுகிறான்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் எத்தனை நாளைக்குதான் இப்படியே செய்துகொண்டிருப்பீர்கள்.. ஒன்னு சேர்ந்து வாழுங்க இல்ல பிரிஞ்சி போய்டுங்க என்று கூறி வருகின்றனர். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா போய்டும் என்று ஒருசிலர் கூறி வருகினறனா. எது எப்படியோ வெண்பா ஸ்கிரீனுக்கு வரும்வரை சீரியல் இப்படியேதான் செல்லும் என்பது எழுதப்படாத விதி என்றுதான் சொல்ல வேண்டும். ... கன்டினியூ பண்ணுங்க பாஸ்....

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: