Advertisment

Tamil Serial Rating : பூ வச்சாலும் பொட்டு வச்சாலும் பாரதி மூஞ்சு கோணல் தான்... எதுக்கு இந்த மேக்கப்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : பூ வச்சாலும் பொட்டு வச்சாலும் பாரதி மூஞ்சு கோணல் தான்... எதுக்கு இந்த மேக்கப்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த கண்ணம்மா நல்லாதான் பண்றாங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ணலாமே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நல்ல சீன் வரும்போது ரோஷ்னி இல்லையே என்று கூறியுள்ளார். பூ வச்சாலும் பொட்டு வச்சாலும் பாரதி மூஞ்ச கோணல் தான் கட்ட போறான் அழ வைக்கப் போறாங்க எதுக்கு மேக்கப் என ஒருவர் கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ரோஷ்னியை மிஸ் செய்வதாக கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

கோபி அப்பாவும், பைனும் இவர் எங்க போறாருனு தெரிஞ்சிக்கிட்டு தான் கேக்குறாங்க என்று கூறியுள்ளார் ஒரு ரசிகர். மற்றொருவர், டைரக்டர் சார் அடுத்து போலீஸ் விசாரணை பற்றிய சீரியலை எடுங்கள் எனறு கோரிக்கை வைத்துள்ளார். மற்றொரு ரசிகர் எழிலுக்கு உண்மை தெரியும்னு தாத்தாவுக்கு தெரியுமா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் வீட்லயே பிஸினஸ் தொடங்கிவிட்டாரா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஐஸ்வர்யா பலே கில்லாடிதான் மாமானார் வீட்டுக்கு முன்னாடியே குடி வந்து அங்கயே உரு ஹோட்டலையும் தொடங்கிட்டாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர் ஒருவர் கண்ணன் இன்னும் வேலை போன விஷயத்தை வீட்டில் சொல்லவில்லையோ என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் நல்லாருக்கு நடத்துங்கச என்றே கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்படியும் இந்த அனு சூழ்ச்சி அர்ஜூன் கண்டு பிடித்து விடுவார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செம சூப்பர் அர்ஜுன் மற்றும் ரோஜா என்றும் கூறியுள்ளார். ஆஹா நம் அர்ஜுன் கண்டுபிடித்துவிட்டார் அனு செய்த வேலையை செம சூப்பர் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அனுவை கண்டுபிடித்த அர்ஜூனுக்கு பாராட்டு தெரிவித்து வருகினறனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாதி வெண்பாவை திட்டியதும், கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழா வருவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment