Advertisment

Tamil Serial Rating : இவ்ளோ பெரிய ஷாப்பிங் மால் ஒரு சிசிடிவி இல்லையா... என்ன சார் இப்படி பண்றீங்க....

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : இவ்ளோ பெரிய ஷாப்பிங் மால் ஒரு சிசிடிவி இல்லையா... என்ன சார் இப்படி பண்றீங்க....

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஜனார்த்தன் அடுத்து ஸ்டார்ட் பண்ணிட்டாரு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இவ்ளோ பெரிய ஷாப்பிங் மால் ஒரு சிசிடிவி இல்லையா சார் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ரொமான்ஸ் பண்றதுல காச விட்டீங்களாக என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணனுக்கு இதே வேலையா போய்டுச்சி எப்போ பார்த்தாலும் அவர்ட திட்டு வாங்கிட்டு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் டைரக்டர் சார் எதாவது புதுசா திங்க் பண்ணுங்க என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உங்க மத்தியில இருக்கரதுக்கு நான்தான்டா சாகனும் என்று சௌந்தர்யா சொல்வது போல் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கன்னடம் தெலுங்கு காப்பி சீரியல் எடுத்தாலும் கதையை மாற்றி எடுக்கவும் மக்கள் விரும்புவது போல் எடுக்கலாம் இயக்குநர் சார் என்று கூறியுள்ளார். கண்ணம்மா டைவர்ஸ் கொடுக்காம பாரதி இருக்கும் போதே ஹேமா என் பொன்னு நான் கூட்டிட்டு போறேன்னு சொல்லனும் அப்போது தான் திருந்துவான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ராதிகா மேடம் இப்போதான் நல்ல முடிவா எடுத்துருக்கீங்க என்று கூறியுள்ளார் மற்றொரு ரசிகர் கோபி உங்களுக்கு ஆப்புதான் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கோபி மனைவி டீச்சர் தான்னு தெரிஞ்சா ராதிகாவோட ரியாக்ஷன் என்ன என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபிக்கு இனி என்ன நடக்க போகுதோ என்று கேட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் இந்த கோபத்தை அப்படியே பாக்யாகிட்ட காட்டுவார் கோபி அதுதானே என்று கேட்டுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சமையல் போட்டி வைததே ஒரு வாரம் ஓட்டிட்டீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கு எல்லாம் சந்தியாதான் காரணம் சிவகாமி மைண்ட் வாய்ஸ் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கேரட் பாயாசம் புது டிஷ்தான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சித்துவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜுன் திருப்பி வந்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது  என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகத்துக்கு பழைய ஞாபகம் வந்துரும்  என்று கூறியுள்ளார். அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு என்று ஒருவர் கூறியுள்ளார். அர்ஜுன் கண்முழித்ததும் செண்பகம் அத்தை எப்படி இருக்காங்க என்று ரோஜாவிடம் கேட்டதில் அர்ஜுனின் பாசம் தெரியுது என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாரதி டைவர்ஸ் நோட்டீஸ் கண்ணம்மா நடவடிக்கை என விறுவிறுப்பாக செல்வதே இதற்கு முக்கிய காரணம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment