/tamil-ie/media/media_files/uploads/2021/08/Roja-Serial.jpg)
Roja Serial Update In Tamil : அனுவுக்கு மிளகாய்ப்பொடி வைத்தது பற்றி ரோஜா, அர்ஜுன், கல்பனா ஆகியோரிடம், கோபமாக பேசும் டைகர் மாணிக்கம் உங்களை சிறையில் தள்ள முடியும் என மிரட்டுகிறார். அப்போது அண்ணப்பூரணி அனுவுக்காக பூஜை செய்வதாக சொல்ல அங்கே வந்து அனு நடிக்கிறாள் என்ற உண்மை நிரூபிக்கிறேன் என்று அர்ஜூன் சொல்கிறார்.
இதன்பிறகு செல்போனில் வீடியோ எப்படி டெலிட் ஆச்சு என்று ரோஜா யோசித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது அவளது செல்போனை வாங்கி பார்க்கும் அர்ஜூன் அனு முதல் 10 நிமிட வீடியோவை அழித்து இருக்கிறாள் என கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு இருக்கும் வீடியோவிலேயே அனு செல்போனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பி இருப்பதும் பதிவாகி இருப்பதையும் பார்க்கிறார். இதை வைத்து அனு பற்றிய உண்மையை நிரூபித்து விடலாம் என ரோஜா சொல்கிறாள்.
ஆனால் அது வேண்டாம் என்று தடுக்கும் அர்ஜூன் பூஜை நடக்கும்போது அனைவரிடமும் காட்டுவோம் என்று சொல்கிறார். அதன்பிறகு இந்த வீடியோவை ரோஜா கல்பனாவிடம் காண்பிக்கிறாள். அனு இப்படி ஏமாற்றுகிறாளே என கல்பனா ஷாக் ஆகிறார். அதன்பிறகு அவர் நடிக்கிறாள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் கல்பனா அனு இப்போ தனியாதான் இருக்கிறாள் பாட்டி ரோஜாவுக்கு கொடுத்த அறையை அனுவுக்கு கொடுக்கவேண்டாமா என சொல்லி அழைத்து சொல்கிறாள்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனுவை ரோஜா மற்றும் கல்பனா சேர்த்து சமாராமரியாக அடிக்கின்றனர். அப்போது வலியை பொறுத்துக்கொள்ளும் அனு அவர்கள் சென்ற பிறகு வலி தாங்க முடியாமல் அலறுகிறாள். அதன் பிறகு ஒரு தோட்டத்தில் ரோஜா போட்டோவுக்கு மாலை போட்டு காளி பூஜையை மந்திரவாதி பெண் செய்துகொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அர்ஜுன் அங்கு வந்துவிட கூடாது என்பதால், ஆட்களை நிறுத்தி இருப்பதாக திவ்யா கூறுகிறார்.
அப்போது அங்கு வரும் அர்ஜுன் தன்னை தடுக்கும் ரௌடிகளை அடித்து துவைக்கிறார். அப்போது அங்கு கூட்டத்துடன் வரும் கல்பனா மற்றும் ரோஜா இருவரும் அனுவின் கட்டவுட்டை இராவணன் போன்ற தோற்றத்தில் கொண்டு வருகின்றனர் அத்துடன் எபிசோடு முடிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.