/tamil-ie/media/media_files/uploads/2021/08/Roja.jpg)
Roja Serial Episode Update : அனுவின் சதித்திட்டத்திற்கு தான் உடந்தையாக இருந்த்தாக பாட்டி ஒப்புக்கொண்டாலும், அவருக்கு எதிராக புகார் வராததால் அவருக்கு தண்டனை கொடுக்க முடியாது என்று நீதிபதி கூறி விடுகிறார். ஆனால், பாட்டி தனக்கு தண்டனை கொடுக்கவில்லை என்றால் இவர்கள் எனகாகு பிச்சை போட்ட போன்ற உணர்வு ஏற்படும் என்று கூறி தண்டனை கேட்பதால் ஒருநாள் மட்டும் அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து பாட்டி சிறைக்கு செல்ல கல்பனா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் உள்ளனர். ஆனால் பாட்டி அவர்களை கண்டுகொள்ளாமல் போலீஸ் ஜீப்பில் ஏறி செல்கிறார். பாட்டி இல்லாததால் அனைவரும் சோகத்தில் உள்ளதால், சாப்பிடாமல் உள்னர். அப்போது அனுவுடன் அங்கு வரும் யசோதா, அம்மாவதான் எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பிப்பிட்டீங்களே என்று கல்பனாவுடன் சண்டை போடுகிறாள்.
அப்போது கல்பனாவுக்கு ஆதரவாக அவரது கணவர் பிரதாப் யசோதாவுடன் சண்டை போட, அர்ஜுன் வந்து யசோதாவை கேள்வியால் மிரட்ட அவர் அமைதியாகிறார். அதன்பிறகு வீட்டில் யாரும் சாப்பிடவில்லை என்று தெரிந்து அனைவரையும் அனைவரையும் சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறார். அப்போது பிரதாப், அர்ஜுனை வக்கீலுக்கு படிக்கவைத்ததற்கு முதல் முறையாக தற்போது வருத்தப்படுவதாக கூறுகிறார்.
மேலும் அவர் என் அம்மா, 10 மாசம் சுமந்து பெற்ற அம்மா. அவரை இப்படி சிறைக்கு அனுப்ப நீயும் காரணமாக ஆகிட்டியே, அவரை நீ அழைத்து விசாரிக்காமல் இருந்திருந்தால் இது ஏற்பட்டு இருக்காது என அர்ஜூனை பார்த்து சொல்கிறார். அதன்பிறகு அர்ஜூன் அவரையும் சமாதானப்படுத்த அத்துடன் முடிந்தது அன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.