Advertisment

ரவுடிகளை விரட்டிய ஹீரோ: பத்திரிக்கை கிழித்த வில்லன்; கல்யாணம் நடக்குமா?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் சந்தியா ராகம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Kd na Sr

ரவுடிகளை துவம்சம் செய்த கார்த்திக்.. ரியாவை கழட்டி விட்ட ரம்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மைதிலியை கடத்தி ரவுடி தீபாவை குடோனுக்கு வர சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, குடோனுக்கு வந்த கார்த்திக் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து மைதிலியை காப்பாறுகிறான். மறுபக்கம் ஐஸ்வர்யா என்னாச்சுன்னு தெரியலையே என்று சந்தேகப்பட்டு ஐந்து கொலை ஆறுமுகத்துக்கு போன் செய்கிறாள்.

ஐஸ்வர்யாவை சுற்றி கோகிலா, ரூபாஸ்ரீ ஆகியோர் இருக்க போனை ஸ்பீக்கரில் போடுகிறாள். ஐந்து கொலை ஆறுமுகம் போனை எடுத்து தீபா வரல கார்த்திக் தான் வந்தான், எல்லாரையும் அடித்து போட்டுட்டு போய்ட்டான், இனிமே 1 வருஷத்துக்கு என்னை கூப்பிடாதீங்க என்று போனை வைக்க இவர்கள் அதிர்ச்சியாகின்றனர்.  அடுத்து போலீஸ் ரியாவை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்க அவள் என்னை எதுக்கு இங்க கொண்டு வந்தீங்க என்று கேள்வி கேட்க நாங்க சொல்ற வரைக்கும் நீங்க இங்க தான் இருக்கனும் என்று சொல்கின்றனர்.

பிறகு ரூமுக்கு சென்ற ரியா ரம்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி எல்லாம் கார்த்தி பிளான் தான் என்று சொல்கிறாள்.  ரம்யா சரி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், இனி எனக்கு போன் பண்ணாத என்று சொல்லி சிம் கார்டை உடைத்து போடுகிறாள்.  மறுபக்கம் மண்டபத்தில் தர்மலிங்கம் நாதஸ்வர கச்சேரி நடக்க அம்பிகா அதை கேட்டு ரசிக்கிறாள். பிறகு அவருக்கு பிடித்த மூன்று சினிமா பாடல்களை சொல்ல தர்மலிங்கம் அந்த பாடல்களையும் நாதஸ்வரத்தில் வாசித்து அசர வைக்கிறார், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பத்திரிகையை கிழித்து போட்ட லிங்கம், ரகுராம் எடுத்த முடிவு - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் 

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பத்மா ரகுராம் மீது புகார் கொடுக்க பஞ்சாயத்தை கூட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது கூடிய பஞ்சாயத்தில் லிங்கத்தை அழைத்து வர சொல்ல ஒருவன் லிங்கத்தை கூட்டி வருகிறான், பஞ்சாயத்துக்கு வந்த லிங்கத்திடம் கல்யாணம் குறித்து பேச அவன் இவங்க மேல சொத்து ஒன்னும் இல்ல, இவங்களுக்கு எப்படி என் பொண்ணை கொடுக்க முடியும்? இந்த கல்யாணம் நடக்காது என்று பத்திரிகையை கிழித்து போடுகிறான். 

உடனே தனம் மாயாவிடம் அப்போ நீயும் மாமாவும் ஒன்று சேர ஒரு வாய்ப்பு இருக்கு என்று சொல்ல மாயா அமைதியா இரு, பெரியப்பா தான் முடிவு எடுக்கணும் என்று சொல்கிறாள். இதை தொடர்ந்து ரகுராம் அப்படினா நான் கொடுத்த வாக்கும் இனி செல்லாது, இந்த கல்யாணம் நடக்காது என்று கை கழுவ பஞ்சாயத்தில் இருந்து எல்லாரும் களைந்து செல்கின்றனர்.

அதன்பிறகு பத்மா, மணிவண்ணன் மற்றும் சீனு மட்டும் போக இடமின்றி நின்று கொண்டிருக்க அங்கு வந்த சிவராமன் வீட்டிற்கு கூப்பிட அந்த வீட்டிற்கு எப்படி வர முடியும் என்று பத்மா கேள்வி கேட்கிறாள். மேலும் சிவராமன் லிங்கம் மேலே எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது, அது இப்போ உறுதியாகி போச்சு.. நீங்க வீட்டிற்கு வந்தா அண்ணன், அண்ணி கண்டிப்பா உங்களை ஏத்துப்பாங்க என்று சொல்லி கூப்பிடுகிறான்.

சீனுவும் நீங்க ரெண்டு பேரும் வீட்டிற்கு போங்க என்று சொல்ல சீனுவையும் கூப்பிட அவன் நான் வரவில்லை என்று அதிர்ச்சி கொடுக்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment