ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் சீதாவாக நடித்து வந்த பிரியங்கா நல்காரி திடீரென சீரியலில் இருந்து விலகிய நிலையில், அடுத்து சீதாக கேரக்டரில் நடிக்க போவது யார் என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ரசிகர்களுக்கு விருப்பமாக கதையம்சம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்புவதில் முக்கியத்துவம் பெற்று வரும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியல் சீதாராமன். சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் நடிரக ரேஷ்மா பசுபுலேட்டி வில்லியாக நடித்து வருகிறார்.
பிடிக்காத மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே நடைபெறும் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த சீரியலின் முக்கிய கதை. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், திடீர் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா நல்காரி தன்னுடைய கணவருக்காக இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். பிரயங்காவின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே பிரியங்கா நல்காரிக்கு பதிலாக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது இந்த சீரியலில், நடிகை ஸ்ரீநிதி இனி சீதாவாக நடிக்க போகிறார் என தகவல் பரவியது. இந்த செய்திகள் வைரலாக பரவிய நிலையில், இது உண்மை இல்லை என அவரே விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே தற்போது சீதா கேரக்டரில் நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில், சசிகுமார் நடிப்பில் வெளியான கொம்பு வச்ச சிங்கமடா, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை ஸ்ரீபிரியங்கா இனி சீதா வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் காவலர்களின் பிரச்சனையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்ட்டிருந்த மிக மிக அவசரம் படம் பலரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில், அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மகளிர் காவலர்களை பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்.
தற்போது சீதாராமன் சீரியலில் இணைந்துள்ள ஸ்ரீ பிரியங்கா இன்னும் சில தினங்களில் திரையில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“