New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Seetha-raman.jpg)
ஜீ தமிழ் சீதாராமன் சீரியல்
பிடிக்காத மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே நடைபெறும் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த சீரியலின் முக்கிய கதை.
ஜீ தமிழ் சீதாராமன் சீரியல்
ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்த பிரியங்கா நல்காரி விலகியதை தொடர்ந்து அந்த கேரக்டரில் அடுத்து நடிக்கும் நடிகை யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ரசிகர்களுக்கு விருப்பமாக கதையம்சம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்புவதில் முக்கியத்துவம் பெற்று வரும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியல் சீதாராமன். சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் நடிரக ரேஷ்மா பசுபுலேட்டி வில்லியாக நடித்து வருகிறார்.
பிடிக்காத மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே நடைபெறும் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த சீரியலின் முக்கிய கதை. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், திடீர் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா நலகாரி தன்னுடைய கணவருக்காக இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். பிரயங்காவின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே பிரியங்கா நல்காரிக்கு பதிலாக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது இந்த சீரியலில், நடிகை ஸ்ரீநிதி இனி சீதாவாக நடிக்க போகிறார் என தகவல் பரவியது. இந்த செய்திகள் வைரலாக பரவிய நிலையில், இது உண்மை இல்லை என அவரே விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுகளை பெற்ற இளம் நடிகை ஒருவர் தான் பிரியங்கா நல்காரியின் இடத்தை நிரப்ப போவதாக தகவல் ஒன்று பரவ தொடங்கி உள்ளது. அந்த நடிகை யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சீரியல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்து வருகிறது. விரைவில் இது குறித்த முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.