Advertisment

மனோஜ் செய்த வேலையை கண்டுபிடித்த முத்து: மீனா கொடுத்த ரியாக்ஷன்; பூகம்பம் வெடிக்குமா?

சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜ் செய்த வேலையை தெரிந்துகொண்ட முத்து அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Rohini Siragadikka Aasa

சிறகடிக்க ஆசை சீரியல்

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல், குறுகிய காலத்தில் பலரின் மனதை கவர்ந்த சீரியலாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் 3 மகன்கள் இருக்கும்போது அதில் முதல் மற்றும் கடைசி மகனை அரவணைக்கும் அம்மா 2-வது மகனை வெறுத்து ஒதுக்குகிறார். இதற்கு காரணம் என்ன? ஏமாற்றும் மூத்த மருமகள் எப்போது மாட்டுவார்? 2-வது மருமகளை எப்போது மாமியார் புரிந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisment

இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். மூத்த மகன் மனோஜ், எந்த வேலையும் செய்யாமல் எல்லோரிடமும் ஏமார்ந்து போய் கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் அவரது கடையில் பெரிய தொகையை ஏமார்ந்துவிட்டார். இதை தனது அம்மாவிடம் சொல்ல, அவர் அவனை அடித்துவிடுகிறார்.

அடி வாங்கிய மனோஜ், இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வர எதாவது ஐடியா கொடுமா என்று கேட்க, என்ன செய்வது என்று யோசிக்கும் அம்மாவிடம் மனோஜ், நனை எதாவது இருந்தால் கொடுங்க என்று கேட்கிறான். அப்போது 2-வது மருமகள் மீனா கொடுத்த நகையை அடமானம் வைத்துவிடுமாறு கொடுத்துவிடுகிறான். இதை எடுத்து போன மனோஜ் கடைக்காரர்களின் பேச்சை கேட்டு, அந்த நகைகளை விற்றுவிடுகிறான்.

இதனிடையே வீடு கட்ட பணம் வேண்டும் என்பதால், இந்த நகைகளை முத்து மீனா இருவரும் திரும்ப கேட்க, என்ன செய்வது என்று தெரியாத அம்மா கவரிங் நகைகளை கொடுத்துவிட, அதை எடுத்துக்கொண்டு நகை கடைக்கு சென்ற மீனா முத்து இருவரும் கவரிங் நகை என்று தெரிந்தவுடன், அவமானத்தை சந்திக்கின்றனர். அப்போது. பாட்டி பங்ஷன் முடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று மீனா முத்துவை சமாதாப்படுத்துகிறாள்.

அதன்பிறகு வீட்டுக்கு வரும் முத்து, மனோஜ்ஜை ஒரு மாதிரி பார்க்கிறான். அதன்பிறகு பாட்டி வீட்டுக்கு வந்து அனைவரிடமும் நன்றாக பேசிக்கொண்டிருக்க, அண்ணாமலை (சுந்தர்ராஜன்) தனது அம்மாவிடம், உங்க பேரன்கள் உங்களுக்கு சிறப்பான பரிசு கொடுக்க போகிறார்கள் என்று சொல்ல, அதை கேட்ட பாட்டி, நானும் அவர்களுக்கு சிறப்பாக பரிசு கொடுக்க காத்திருப்பதாக கூறுகிறார். இந்த காட்சிகள் நாளைய எபிசோட்டில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment