Advertisment

மீனாவை ஏமாற்றிய முத்து: விஜயா கொடுத்த அதிர்ச்சி; பூகம்பம் வெடிக்குமா?

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Siragadikka Asai

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் சிறக்கடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சீரியல்களில் ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், மனோஜ் பாட்டிக்கு என்ன கிப்ட் கொடுக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, சின்ன வயதில், அவரது நவரத்தின மாலை தொலைந்துவிட்டது. அதை வாங்கி கொடுக்கலாம் என்று சொல்ல, ரோஹினியும் சூப்பர் என்று சொல்லிவிட்டு இருவரும் அதை வாங்குவதற்காக வெளியில் கிளம்புகின்றனர். அப்போது பாட்டிக்கு நவரத்தின மாலை வாங்கும்போது அவருக்காக எடுத்த புடவை எதற்கு ரிட்டன் பண்ணிடலாம் என்று அதையும் எடுத்து செல்கின்றனர்.

அடுத்து அண்ணாமலையிடம் பேசும் விஜயா நீங்க உங்க அம்மாவுக்கு என்ன கிப்ட் கொடுக்க போறீங்க என்று கேட்க, அதற்கு அண்ணாமலை அதான் அவங்க வேண்டாம் என்று சொல்லிட்டாங்களே என்று சொல்ல அவங்க அப்படித்தான் சொல்வாங்க நாம் வாங்கி கொடுக்கலாம் என்றதும் அண்ணாமலை அதிர்ச்சியாகிறார். சும்மா பாக்காதீங்க எனக்கும் அத்தை மேல அக்கரை இருக்கு என்று சொல்லும் விஜயா, பார்வதிக்கு போன் செய்து உங்க வீட்டில் இருக்கும் பழைய டிவியை பேக் செய்து வை என்று சொல்கிறார்.

மேலும் அந்த டிவியை கிப்டாக் கொடுத்து அத்தையிடம் இருந்து நான் பரிசு வாங்கிக்கொள்கிறேன் என்று ப்ளான் போட்டு அந்த கிப்டில் உனக்கும் பங்கு தருகிறேன் என்ற விஜயா பார்வதியிடம் சொல்கிறார். அதன்பிறகு ரவியிடம் பேசிக்கொண்டிருக்கும் ஸ்ருதி, எனக்கு கிப்ட் எதும் வேண்டாம் ஆனா சின்ன வயசுல இருந்து எதாவது போட்டி வைத்தால் நான் தான் ஜெயிப்பேன். இதிலும் நான் தான் ஜெயிப்பேன் என்று சொல்கிறாள். அடுத்து மீனாவிடம் முத்துவை பற்றி அண்ணாமலை விசாரிக்கிறார்.

அப்போது குறுக்கிடும் விஜயா, அவன் எங்காவது குடிக்க போய்ருப்பான் நாலு காலில் வருவான் என்று சொல்ல, அவர் அப்படியெல்லம் பண்ண மாட்டார் என்று மீனா சொல்கிறாள். அதன்பிறகு சீதா போன் கொடுக்க அந்த போனை வைத்து பாட்டியை வீடியோ எடுக்கிறாள். அப்போது பாட்டியும் முத்துவை பற்றி விசாரிக்க, மீனா முத்துவுக்கு போன் பண்ண, முத்து போனை எடுக்கவில்லை. இதனால் அவர் குடிக்கதான் போயிருப்பாரோ என்று மீனா சந்தேகப்படுகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment