மீண்டும் குடிகாரன் ஆன முத்து; மீனா கேட்ட நறுக்கான கேள்வி; போலீஸ் அருண் என்ன செய்வார்?

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து மீண்டும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, மீனாவும் அண்ணாமலையும் கோபத்தில் இருக்கின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து மீண்டும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, மீனாவும் அண்ணாமலையும் கோபத்தில் இருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Siragansh

சிறடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து காரை நிறுத்திய அருண் மெஷின் கொண்டு வந்து நீ குடித்திருக்கியா இல்லையா என்று ஊது என்று சொல்ல, அதற்கு முத்து, நான் குடிக்கவில்லை அதனால் நான் ஊத மாட்டேன் என்று திமிராக சொல்ல, வந்த மற்றொரு போலீஸ் என்ன இருவரும் மீண்டும் மீண்டும் சண்டை போட்டுக்கறீங்க என்று கேட்க, உங்களை மாதிரி நல்லவங்க சொன்னா நான் செய்வேன் என்று முத்து மிஷினில் ஊதுகிறான். அதன்பிறகு முத்து குடிக்கவில்லை என்றதும் அந்த போலீஸ்காரர் போக சொல்கிறார்.

Advertisment

அடுத்து தனது அம்மாவை சந்திக்கும் மீனா ஆர்டர் வாங்குவதற்கு பணம் இல்லாத விஷயத்தை சொல்ல, நான் ஏதாவது ரெடி பண்ண முடியுதா என்று பாக்குறேன் என அவரது அம்மா சொல்கிறார். அப்போது, அங்கு வரும் சீதா, ஒரு லட்சம் ரூபாய் சீட்டு போட்டு வச்சிருக்கிறேன். 40 ஆயிரம் சேவிங்கில் இருக்கு நான் கொடுக்கிறேன் என்று சொன்னதும் மீனா, வேண்டாம் என்று சொல்கிறார். உன் தங்கச்சி கொடுத்தா நீ வாங்க மாட்டியா என்று சென்டிமண்டாக பேச மீனா வாங்கிக்கொள்கிறாள்.

இந்த பக்கம் செல்பத்தை பாருக்கு வர சொல்லும் முத்து, குடித்து குடித்துக்கொண்டு இருக்கிறான். கொஞ்ச நாளா இந்த பழக்கத்தை விட்டு இருந்தா இப்போ எதுக்கு இதை திரும்ப பண்ணுற என்று செல்வம் கேட்க, அந்த போலீஸ்காரர் என்கிட்ட டென்ஷன் பண்ணிட்டு இருக்காரு அவனை ஏதாவது பண்ணனும். நான் இப்போ புல்லா குடிச்சிருக்கேன். திருப்பி அந்த இடத்துக்கு போகணும் நீதான் வண்டி ஓட்டணும் என்று சொல்கிறான்.

இதை கேட்ட செல்வம், செல்வம் எதுக்குடா தேவையில்லாத வம்பு இழுக்குற என்று கேட்க, வம்பு இழுப்போம் நல்லா தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு காரில் கிளம்புகிறார்கள். காரை நிறுத்தும் அருண் செல்வத்தை குடித்திருக்கியா என்று கேட்க, அதற்கு முத்து அவன் குடிக்கல நான் தான் குடித்து இருக்கிறேன் என்று முத்து திமிராக பேச, அருண் ஒரு கட்டத்தில் கோபமாகிறான். அந்த நேரத்தில் இன்னொரு போலீஸ் வந்து செல்வத்தை கார் எடுக்கும்படி சொல்ல, அருண் முத்துவை கோபமாக பார்க்கிறார்.

Advertisment
Advertisements

அடுத்ததாக மீனா பூ கட்டி கொண்டிருக்கும் போது அண்ணாமலை முத்து இன்னும் வரலையா என்று கேட்க, சவாரி போயிருப்பார் வந்துருவார் மாமா என்று சொல்லும்போது, முத்து வீட்டுக்கு வர முத்து குடித்திருப்பதை பார்த்து மீனா கோபப்படுகிறார். அப்போது டிராபிக் போலீஸ் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி முத்து சொல்ல, இதை கேட்ட மீனா அவர் அவருடைய வேலையை தானே பார்த்தாரு. நீங்க குடிக்கலன்னா ஊதிட்டு போக வேண்டியது தானே எதுக்காக அவர் கிட்ட திமிரா பேசிட்டு, இப்போ குடிச்சிட்டு வந்து பிரச்னை பண்றீங்க என்று கேட்கிறாள்.

உங்க மேல இருக்கிற தப்பை மறைக்கதான் நீங்க இப்படி எல்லாம் நடந்து இருக்கீங்க என்று மீனா கோபப்பட, நீ சம்பாதிக்கிற திமிரில புருசனையை எதிர்த்து பேசுற என்று தன்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து போட்டுவிட்டு முத்து படுத்துவிட, அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. 

Siragadikka Aasai Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: