சிறகடிக்க ஆசை சீரியலில், மீனாவிடம் இருந்து சிந்தாமணி திருடிய பணத்தை எடுக்க ப்ளான் போட்ட முத்து அதை சிறப்பாக செய்து முடிக்க, இந்த பக்கம்,விஜயா மீது குடும்பத்தினருக்கு சந்தேகம் வருகிறது.
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், சிந்தாமணி வீட்டில் பணத்தை எடுத்துக்கொண்ட முத்து, ரவி, ஸ்ருதி, செல்வம் ஆகியோரை அலார்ட் செய்து வீட்டில் இருந்து வெளியேறுகின்றனர். அப்போது ஸ்ருதியின் தலைமுடி கதவில் மாட்டிக்கொள்ள, முத்து செல்வம் ரவி மூவரும் காருக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். அந்த நேரத்தில் சிந்தாமணி வீட்டுக்கு வந்து விடுகிறார்.
ஸ்ருதியை பார்த்ததும் யாருமா நீ என்று கேட்க, ஸ்ருதி தயங்கி கொண்டு நிற்கிறார். ஆனால், அவசரம் காரணமாக, சிந்தாமணி இரு வரேன் என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் ஓட, அதற்குள் ஸ்ருதி அங்கிருந்து தப்பித்துவிடுகிறாள். சிந்தாமணி வீட்டுக்கு வருவதை பார்த்த வேலை ஆட்கள் வருமான வரித்துறை என்று சொல்ல, எனக்கு அவசரமா போகணும் என்று சொல்லிவிட்டு, சிந்தாமணி கழிவறைக்கு ஓடுகிறார்.
காரில் வந்து ஏறிய ஸ்ருதி ரவி தன்னை விட்டுட்டு வந்தது குறித்து அவரை திட்டிக் திட்ட முத்து ஸ்ருதியை பெருமையாக பேசி, சமாதானம் சொல்கிறாள். கழிவறையில் இருந்து வெளியில் வரும் சிந்தாமணியிடம், வருமானவரித்துறையில் இருந்து வந்தாங்க வீடு முழுக்க பார்த்துவிட்டு, கடைசியில் ஒரு மஞ்சள் பையை மட்டும் எடுத்துட்டு போனாங்க என்று சொல்கிறன்றனர். இதை கேட்டு அதிர்ச்சியான சிந்தாமணி ஓடி சென்று பீரோவில் பார்க்க அங்கு பணம் இல்லாமல் இருக்கிறது.
பணம் காணாமல் போனதை நினைத்து கடுப்பில், வேலையாட்களை அடிக்க, அந்த நேரத்தில் மீனா போன் போட்டு என்னம்மா கண்ணு வருமான வரித்துறையில் வந்து காசு எடுத்துட்டு போய்ட்டாங்களா என்று கேட்க, அதற்கு சிந்தாமணி உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறாள். நீ என்ன வேணா பண்ணுவ, நான் அமைதியா விட்டுடுவேன். ஆனா என் புருஷன் அப்படி கிடையாது. நல்லவங்களுக்கு ரொம்ப நல்லவரா இருப்பார். கெட்டவங்களுக்கு ரொம்ப ரொம்ப கெட்டவரா இருப்பாரு என்று சொல்கிறாள்.
மீனாவின் பேச்சை கேட்ட, சிந்தாமணி, நான் போலீசுக்கு போன் பண்றேன்னு சொல்ல, உடனே பண்ணு முதல்ல நீ தான் மாட்டுவ. உனக்கு பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள் என்று மீனா சொன்னதும், சிந்தாமணி அமைதியாகி விடுகிறார். அதன்பிறகு, இப்பவும் சொல்லுறேன் வாழு வாழ விடு என்று டயலாக் பேசிவிட்டு மீனா போனை வைக்கிறார்.
மறுபக்கத்தில் வீட்டுக்கு வந்த முத்து அண்ணாமலையிடம் முக்கியமான விஷயமா பேசணும்பா என்று எல்லாரையும் கூப்பிட்டு வைத்து மீனா கிட்ட இருந்து திருடிட்டு போன பணத்தை கண்டுபிடிச்சாச்சு என்று சொல்ல, யார் எடுத்துட்டு போனாங்க என்று அண்ணாமலை கேட்கிறார். அதற்கு முத்து, நம்ம அம்மாவோட பிரண்டு தான் என்று சொல்ல, விஜயா முழிக்கிறார். மீனாவுக்கு ஆர்டர் கிடைக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி பண்ணி இருக்காங்க. இவங்க பின்னாடி வேற யாரோ இருக்காங்க என்று சொல்ல, விஜயா திருதிருவென முழிக்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.