விஜயாவை அடித்த மீனா; அம்மாவால் ரோஹினிக்கு வந்த பிரச்னை: சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியலில், ரோஹினிக்கு அவரது அம்மா வடிவில் பிரச்னை வர, விஜயாவுக்கு மீனா தலையணையால் அடித்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியலில், ரோஹினிக்கு அவரது அம்மா வடிவில் பிரச்னை வர, விஜயாவுக்கு மீனா தலையணையால் அடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
siragadikka aasai March 29.jpg

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி பிரச்னை மேல் பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், இப்போது அவரது அம்மாவே, கிரிஷை் வைத்து ரோஹினியை மிரட்டுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், மீனாவிடம் பேசிவிட்டு சீதா வேலைக்கு கிளம்ப, அந்த நேரத்தில் வரும், மீனாவின் அம்மா மீனாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு பெண் சாமியார், மீனாவை கூப்பிட்டு, உன்னுடைய புருஷனுக்கு ஒரு பிரச்சனை வரப்போகிறது. ஒரு பிரச்சனை உன் புருஷன் காலை சுற்றிக்கொண்டு இருக்கிறது.  நீ எப்போதும் போல எல்லோருக்கும் நல்ல விஷயங்கள் பண்ணனும் அப்போது ஒருத்தர் வந்து நீ நல்லா இருப்பமா அப்டினு சொன்னா உன் புருஷனுக்கு மலை போல வர பிரச்சனை பனி போல விலகிடும் என்று சொல்ல, மீனா குழப்பத்துடன் வீட்டிற்கு வந்து முத்துவிடம் இந்த விஷயத்தை சொல்ல, முத்து கிண்டல் செய்கிறான்.

அதற்கு மீனா கோபப்பட, எனக்கு பிரச்சனை வரக்கூடாது அப்படினா நான் சரக்கு அடிச்சிட்டு தூங்கிடனும் என்று முத்து சொல்கிறான்.  இதை கேட்ட மீனா, கோபத்தில், தலையணையை எடுத்து முத்துவை அடிக்க, அந்த நேரம் பார்த்து முத்து விலகிவிட, வீட்டு வாசலில் நின்ற விஜயாவின் மீது விழுகிறது. இதனால் கோபப்படும் விஜயா, நீ வேணும்னு தான் அடிச்ச என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு முத்து நாங்க ரெண்டு பேரும் விளையாடிட்டு இருந்தோம் நீங்கதான் குறுக்க வந்துட்டீங்க என்று சொல்கிறார், இந்த வயசில் உங்களுக்கு விளையாட்டு தேவையா என்று விஜயா கேட்கிறார்.

அந்த நேரத்தில் அண்ணாமலை அங்கு வந்து விஜயாவை சமாதானம் செய்ய, உங்களுக்கு நான் அடிச்சது வருத்தமா இருந்தா என்னை திருப்பி அடிச்சிடுங்க என்று விஜயாவிடம் மீனா சொல்ல, விஜயா தலையணை எடுத்து அடிக்கிறார். அப்போது முத்து மீனாவை பிடித்து இழுத்து விட, விடுகிறார் அந்த நேரம் அங்கு வந்த மனோஜ் தலையில் தலையணை விழ உடனே மனோஜ் கத்திவிடுகிறார்.
அதன்பிறகு கோவிலில் சாமியார் சொன்னது பற்றி முத்து அண்ணாமலையிடம் சொல்ல,  அதை கேட்ட விஜயா இவனால தான் எல்லாருக்கும் கெட்டது நடக்கும் இவனுக்கு யாராலும் கெட்டது நடக்காது என்று சொல்கிறார்.

Advertisment
Advertisements

இதை கேட்டு கோபமான அண்ணாமலை, முத்துவும் உன்னுடைய மகன்தான் எப்ப பார்த்தாலும் அவனை குறை சொல்லிக்கிட்டே இருக்க என்று விஜயாவை திட்டுகிறார்.  மறுபக்கத்தில் முருகன் வித்யாவை பார்க்க வர அங்கு ரோகிணி இருக்கிறார். வித்யா முருகனை ரோகிணியிடம் அறிமுகப்படுத்துகிறார். முருகன் அங்கிருந்து கிளம்பியதும், அங்கு வரும் ரோஹினியின் அம்மா, தினமும் உன் மாமனாரிடம் பேசிட்டு தான் க்ரிஷ் ஸ்கூலுக்கு போறான். அவரும் அவன் எங்கே இருக்கிறான் என்று பார்த்து வந்து பேசுறாரு, எனக்கு பயமாயிருக்கு.

நீ பணக்கார பொண்ணு இல்லனு தெரிஞ்சப்ப வந்த பிரச்னையே போதும்.க்ரிஷ் பற்றி முத்து மீனாவிடம் சொல்லிடலாம் என்று சொல்ல, ரோஹினி கோபப்படுகிறார். என்னை பற்றி வீட்டில் எப்போதும் சொல்வதே அவங்க தான், அவங்க கிட்ட போய் சொல்ல எப்படி சொல்வது, என் வாழ்க்கையை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Siragadikka Aasai Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: