சிறகடிக்க ஆசை சீரியலில், விஜயா கொண்டு வந்த தாயத்தை அண்ணாமலை கட்டியிருப்பதை பார்த்து பதறிப்போன நிலையில், விஜயாவே அதிர்ச்சியாகும் வகையில், மனோஜ் அதிர்ச்சி நடந்துகொண்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜுக்கு வாங்கி வந்த தாயத்தை அண்ணாமலை கட்டி இருப்பதை பார்த்து பதறிப்போன விஜயா இந்த தாயத்து மனோஜ்க்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக வாங்கியது என்று சொல்லி கழற்ற, மீனா சிரித்துக்கொண்டே இருக்கிறாள். இதை பார்த்து விஜயா கடுப்பாக, விஜயா தாயத்தை எடுத்து மனோஜ்க்கு கட்டிவிட்டு, உன்னுடைய பிசினஸ்க்காக கட்டியது என்று சொன்னதும் மனோஜ் சரி என்று சொல்கிறார். அதேபோல் ரோகிணி மற்றொரு கையில் அவர் வாங்கி வந்த தாயத்தை கட்டி விடுகிறார்.
மறுபக்கத்தில் முருகன் முத்துவை அழைத்துக் கொண்டு வீடு பார்க்க வர, அந்த இடத்திற்கு, வித்யாவும் மீனாவுடன் வருகிறார். இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்ல,இவர்களுக்குள் மனசு ஒத்துப் போச்சு அதனால் பழைய கதை எல்லாம் பேச வேண்டாம் என்று மீனா சொல்ல, நீங்கதான் எங்க கல்யாணத்தை முன் நின்று நடத்தணும் என்று முருகன் மற்றும் வித்யா இருவரும் முத்துவிடம் சொல்கிறார்கள். மறுபக்கத்தில் ரோகிணி வைத்த அயன்பாக்ஸில், மனோஜ் சுட்டுக்கொண்டு கத்துகிறார்.
ரோஹினி திட்டு வாங்குவதை பார்த்து விஜயா மறைந்திருந்து பார்த்து சந்தோஷப்பட, விஜயா ரூமுக்கு வந்து, மனோஜிடம் கேட்டு, ரோஹினியை திட்ட, எதுக்கு இந்த வந்தீங்க அதான் நான் பேசிட்டு இருக்கேனே நீங்க வெளியே போங்க என்று மனோஜ் சொல்ல, அதிர்ச்சியான விஜயா, கண்கலங்கி அழுது கொண்டு வெளியே வருகிறார். இதை பார்த்து ரோகிணி பார்த்து சந்தோஷப்படுகிறார். விஜயா அழுவதை பார்த்து வீடு்டில் இருந்த அனைவரும் என்ன ஆச்சு என்று விசாரிக்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.