மீனா - ரோஹினி இடையே வாக்குவாதம்; முத்துவக்கு விஜயா சப்போர்ட்: மனோஜ் நிலை என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
siragadikka aasai March 29.jpg

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணி மீனாவிடம் வாக்குவாதம் செய்ய, முத்துவுக்கு சப்போர்ட்டாக விஜயா பேச அதனால் மனோஜ் கோபப்படுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், மீனா செய்து கொடுத்த வடையால் நல்ல பேரு கிடைச்சிருக்கு என்றும், தங்களுக்கு கொடுத்த  கிப்ட்டில், பாதி பணத்தை நாங்க மீனாவுக்கு கொடுக்கிறோம் என்று ஸ்ருதி சொல்ல, முதலில் மறுக்கும் மீனா அதன்பிறகு, வாங்கி கொள்கிறார். மாலை கட்டுறதோடு சேர்ந்து சைடு பிசினஸ் ஆக இந்த ஸ்நாக்ஸும் செய்யலாம், நீங்க பிசினஸ்வுமனாக முன்னேறிடுவீங்க என்று ரவி அட்வைஸ் கொடுக்கிறான்.

இதை கேட்டு கடுப்பாகும் மனோஜ், ரெண்டு வாழைப்பூ வடை கட்டி கொடுத்தா பிசினஸ்மேன் ஆகிடுவாங்களா? இவங்களுக்கு பிசினஸ் பத்தி என்ன தெரியும் என்று கேட்க, அதற்கு முத்து மீனாவுக்கு சப்போர்ட் செய்கிறான். இதை கேட்ட விஜயா, டேய் நமக்கு வாச்சது சரியில்லன்னா எல்லாரும் இப்படித்தான் கண்டபடி பேசுவாங்க என்று மனோஜை திட்டுகிறார். மீனா சொந்தமா பிசினஸ் பண்ணுற, ஆனால் ரோகிணி கூலி வேலைக்கு தானே போய்கிட்டு இருக்கிறா என்று விஜயா திட்டுகிறார்.

இதை கேட்ட அண்ணாமலை, யாரையும் மட்டம் தட்டி பேசாத என்று திட்டுகிறார். இதை பார்த்த மீனா, பாவம் ரோகிணி தேவை இல்லாமல் நம்மளாலபேச்சு வாங்குறாங்க என்று முத்துவிடம் சொல்ல, நீ எத்தனை முறை அம்மாகிட்ட பேச்சு வாங்கியிருக்கிறா? அப்போ அவங்க வருத்தப்பட்டாங்ளா, அம்மாவிடம் இன்னும் கொஞ்சம் ஏத்தி தான் விடுவாங்க. ஆனால் நீ மட்டும் ஏன் தான் இப்படி இருக்கியோ என்று முத்து திட்டுகிறான்.

Advertisment
Advertisements

அடுத்ததாக இரவு மாடியில் ரவி, மனோஜ், முத்து மூன்று பேரும் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ் சோகமாக இருக்க ரவி அம்மா அண்ணியை இப்படி திட்ரங்க நீ கேட்கவே மாட்டியா என்று கேட்க, ரோகிணி பக்கம் பேசுறதா இல்ல அம்மா பக்கம் பேசுறதானு தெரியல என்று மனோஜ் சொல்ல, அண்ணி உனக்காக தானே ஏமாற்றி உன்னை கல்யாணம் பண்ணி இருக்காங்க அப்போ நீ அவங்க பக்கத்துல தான் பேசணும் என்று ரவி சொல்கிறான்.

இதை கேட்ட மனோஜ், எனக்கு அவங்களும் முக்கியம் என்று சொல்ல, யார் நம்ம கூட அதிக நாள் இருப்பாங்கன்னு புரிஞ்சு நடந்துக்க என்று முத்து சொல்ல, மனோஜ் திமிராக பேசுகிறான் மறுபக்கத்தில் மீனா, ரோகிணி, ஸ்ருதி மூன்று பேரும் பெசிக்கொண்டிருக்க,  அத்தை எப்போதும் திட்டிக்கிட்டே இருக்கிறாங்க என்று ரோஹினி வருத்தப்படுகிறாள். அதற்கு இதில் இருந்து தப்பிக்க, மீனாவிடம் ஐடியா கொடுங்க என்று ஸ்ருதி கேட்க, மீனா தான் ஏற்கனவே சொன்ன பார்வதி ஆன்டி விஷயத்தை சொல்கிறான்.

அதன்பிறகு ஸ்ருதி,ஒரு சாமியாரை செட் பண்ணி அவரிடம் இந்த மருமகள் உங்க கூட இருந்தா தான் உங்களுக்கு நல்லது. உங்க பையனுக்கு நல்லது என்று ஏதாவது சொல்ல சொல்லுவோம் என்று சொல்ல, இதை கேட்ட ரோஹினி, இப்போ இதையும் செஞ்சா ஆன்ட்டி என் மேல ரொம்ப கோபப்படுவாங்க. என்னை மாட்டி விடுறதுக்கே இந்த வீட்டில் ரெண்டு பேரும் இருக்காங்களே என்று மீனாவை பார்த்து ரோகிணி சொல்ல மீனா கோபப்டுகிறாள்.

மீனா ரோகிணி இடையே வாக்குவாதம் நடக்க, ரோஹினி கோபமாக அங்கிருந்து கிளம்பி விட்டு, அடுத்த நாள் காலையில் பார்வதி வீட்டிற்கு வருகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. 

Siragadikka Aasai Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: