Advertisment

சன் டி.வி சீரியல் நடிகர் புது என்டரி... ரோஹினி மாட்டுவாரா? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

விஜய் டி.வியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிறகடிக்க ஆசை சீரியிலில் சன் டி.வி சீரியல் நடிகர் புதிதாக என்டரி ஆகியுள்ளார்

author-image
WebDesk
New Update
Rohini Siragadikka Aasa

சிறகடிக்க ஆசை சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அவ்வப்போது புதிய மாற்றங்கள் வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பெற்று வருகிறது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது புதிய நடிகர் ஒருவர் என்டரி ஆகியுள்ளார்.

Advertisment

ஒளிபரப்பாக தொடங்கியதில் இருந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில், இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் மகன் மனோஜ் படித்து பல டிகிரி வாங்கியிருந்தாலும், வேலைக்கு செல்லாமல் பார்க்கில் பொழுதை கழித்தார்.

கடந்த வாரம் இவர் வேலைக்கு செல்லவில்லை, பார்க்கில் தூங்குகிறார் என்பது, 2-வது மகன் முத்துவால் தெரியவந்த நிலையில், அடுத்து மனோஜின் மனைவி ரோஹினியின் பொய் எப்போது வெளியே வரும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் அனைவரும் கிராமத்திற்கு சென்றுள்ள நிலையில், 3-வது மருமகள் ஸ்ருதி பணக்கார குடும்பம் என்பதால் அவருக்கு பொங்கல் சீர் வந்துவிட்டது.

இதை பார்த்த விஜயா, வழக்கம்போல் மீனாவை குற்றம் சொல்ல, ரோஹினியிடம், வெளிநாட்டில் இருக்கும் உன் அப்பா அல்லது உன் மாமா யாராவது ஒருவர் நம்ம வீட்டுக்கு வந்துவிட்டு போய்விட்டால், இவர்கள் வாயை அடைத்துவிடலாம் என்று சொல்ல, மீனாவின் தம்பியின் நண்பன் ஒருவரிடம், கடன் வாங்கிய ரோஹினி, ஒரு கரிக்கடைகாரரிடம் கொடுத்து, தனது மாமாவாக நடிக்குமாறு கூறியுள்ளார். அவர் தொடர்பான காட்சிகள் நேற்று ஒளிபரப்பானது.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, சன்டிவியின் ஹிட் சீரியலான திருமதி செல்வம் சீரியலில், பூங்காவனம் என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஜெயமணி தான். அந்த சீரியலில் காமெடி செண்டிமெண்ட் என அசத்திய நடிகர் ஜெயமணி இந்த சீரியலில் வெள்ளந்தி மனிதனாக முதல் நாளே கவனம் ஈர்த்துள்ளார். அதே சமயம் ரோஹினி இவரால் தானட் மாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான ரோஹினி அதை எல்லாம் மறைந்து மனோஜை திருமணம் செய்துள்ள நிலையில், இவர் விரைவில் மாட்டினால், விஜயாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment