உண்மையை உடைத்த அண்ணாமலை... முத்துவுக்கு ஷாக் கொடுத்த மீனா : சிறகடிக்க ஆசையில் இன்று

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Annamalai Vijaya

சிறகடிக்க ஆசை சீரியல்

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக தற்போது உருவெடுத்துள்ள சிறடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

நெஞ்சுவலியால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட அண்ணாமலை கண்விழித்ததும், விஜயா அவரை பார்த்து அழுகிறார். அப்போது எனக்கு எதாவது ஆகிவிட்டா நீங்க என்ன பண்ணுவீங்களு நெனச்சி பயந்தேன் என்று அண்ணாமலை சொல்கிறார். அதன்பிறகு முத்து அப்பா அண்ணாமலையிடம் நலம் விசாரிக்கிறார். அதற்கு நல்லா இருக்கேன் என்று சொல்லும் அண்ணாமலை, மீனாவை பற்றி விசாரிக்கிறார்.

அதற்கு சமாளித்து முத்து அண்ணாமலையை வீட்டுக்கு கூட்டி வருகிறார். வீட்டுக்கு வந்தபின் மீனா எங்கே என்று விசாரிக்க, முத்து ஏதோ சொல்லி சமாளிக்கிறான். மருத்துவ செலவுக்கு என்ன பண்ணீங்க என்று கேட்க, முத்து அதற்கும் சமாளிக்க, விஜயா முத்து காரை விற்றுவிட்டதாக சொல்கிறாள். மேலும் என்னுடைய நகையும் அடமானம் வைத்து தான் மருத்துவ செலவை பார்த்தோம் என்று சொல்கிறாள்.

அதற்கு அண்ணாமலை வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்க வேண்டியதானே என்று கேட்க, அதைத்தான் அந்த மீனா தூக்கிட்டு ஓடிட்டாலே என்று சொல்கிறாள். நீங்க அவள்ட கொடுத்தீங்க, அவ எங்க கொண்டு அடகு வச்சிட்டு எந்த தேசத்துக்கு போனாலோ, வீட்டு பத்திரம் இப்போ என்று சொல்கிறாள். இதை கேட்ட அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.

Advertisment
Advertisements

மேலும் நான் பத்திரத்தை கொடுத்த அன்றே மீனா என்னை தனியா கூப்பிட்டு பேசினாள். இது உங்ககிட்ட இல்லனா அத்தைக்கிட்டதான் இருக்கனும். அதுதான் நியாயம் என்று சொல்லி பத்திரத்தை என்னிடமே திருப்பி கொடுத்துவிட்டாள். பத்திரம் நம்ம பீரோலதான் இருக்கு என்று சொல்கிறார். அதன்பிறகு முத்துவிடம் ரோஹினிகிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல, அப்பாவுக்காக முத்துவும் மன்னிப்பு கேட்கிறான்.

அதன்பிறகு நீ மீனா வீட்டுக்கு போய் அவளை கூட்டிகிட்டு வா என்று சொல்ல, அவ வந்ததுக்கு அப்புறம் தான் பிரச்சனையே வந்துச்சு தரித்திரம் போய் தொலையட்டும் என்று விஜயா சொல்கிறார். அதற்கு அவளை திட்டும் அண்ணாமலை மீனா இந்த வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் தான் பிரச்சனையே வந்துச்சு என்று சொல்கிறார். மீனா வராமல் மாத்திரி சாப்பாடு எதையும் சாப்பிட மாட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு முத்து வேறு வழி இல்லாமல் மீனாவை கூப்பிட செல்கிறான்.

மீனா வீட்டுக்கு சென்று கௌம்பு போகலாம் என்று சொல்ல, மீனா எங்க என்று கேட்கிறாள். என் அப்பாவுக்கா இவ வருவாளா மாட்டாளா என்று கேட்க, மீனாவின் அம்மா அவரை சமாதானப்படுத்தி அனுப்புகிறார். மீனாவும் உங்களுக்காக இல்லை என்றாலும் மாமாவுக்காக வருகிறேன் என்று சொல்லிவிட்டு வருகிறார். வீட்டுக்கு வந்த மீனா வாசலில் நிற்க அவளை பார்த்து அண்ணாமலை வாமா என்று சொல்ல அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: