Advertisment

மீனா மீது திருட்டுப்பழி... மீண்டும் எஸ்கேப் ஆன ரோஹினி : குடும்பம் உடையுமா?

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்துது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Siragadikka AAsai Movie

சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல் சிறகடிக்க ஆசை. வெற்றி, கோமதி பிரியா, சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில், பார்ப்போம்.

Advertisment

தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வுக்காக, ரோஹினியின் அப்பா அம்மா வரவில்லை என்பதால் விஜயா கோபமாக இருக்க, ரோஹினி ஏற்பாடு செய்த ஆள் முத்துவை குடிக்க வைக்க முயற்சி செய்கிறான். அவனுடன் சென்ற முத்து சரக்கு க்ளாசுடன் அமர்ந்திருக்கிறான். மறுமுனையில் முத்துவை காணவில்லை என்று அண்ணாமலை தேடிக்கொண்டிருக்கிறான்.

இதனிடையே ரோஹினியை சந்திக்கும் வித்யா, முத்துவை குடிக்க வைக்க அவன் அழைத்து சென்ற விஷயத்தை சொல்ல, ரோஹினி சந்தோஷப்படுகிறாள். ஆனால் அதற்குள் என்டரி ஆகும் விஜயா, உங்க அப்பா எங்கே என்று கேட்க, அவருக்கு போன் செய்துவிட்டேன், போன் போகவில்லை என்று சொல்ல, வரமாட்டார் என்றால் அதை முன்பே சொல்ல வேண்டியதானே என்று விஜயா சொல்கிறாள்.

இதனிடையே முத்துவை அழைத்து சென்ற அந்த நபர் குடித்துக் கொண்டிருக்கு முத்து அப்படியே அமர்ந்திருக்கிறான். ஏன் என்று கேட்க, பங்ஷனில் என்னால் எந்த பிரச்சனையும் வர கூடாது என்று என் அனைவி சொல்லி இருக்கிறாள். அது மட்டும் இல்லாமல் ஒரு குடிகாரன் குடிக்க கூப்பிட்டால் அவனுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் அதனால் தான் வந்தேன். நான் குடிக்க மாட்டேன் என்று சொல்ல, இதை கேட்டு மீனா சந்தோஷப்படுகிறாள்.

அதன்பிறகு முத்துவை அழைத்து சென்று பங்ஷன பார்க்கிறான். விஜயா ரோஹினியிடம் சென்று உங்க அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கு என்று சொல்ல, இப்படி ஆண்டி அவங்கதான் வரவில்லையே என்று சொல்ல, இது இப்போதான் உனக்கு தெரியுதா என்று விஜயா சத்தம் போடுகிறாள். இதை கேட்ட அண்ணாமலை அந்த பொண்ணே அவங்க அப்பா அம்மா வரலனு சோகமாக இருக்கு என்று சொல்லி தேற்றுகிறார்.

அதை கேட்ட ரோஹினி இப்போதைக்கு நீங்கள் தான் என் அப்பா அம்மா என்று சொல்லி ட்ராமா போட்டு நடிக்கிறாள். அதன்பிறகு வித்யாவுடன் சென்று தனி அறையில் அழுது புலம்ப, அதன் தனியா வந்தாச்சே இன்னும் ஏன் நடிக்கிற என்று வித்யா கேட்க, எப்படி பண்றாங்க பார்த்தியா என்று ரோஹினி கேட்கிறாள். மனோஜ் உன் பேச்சை மட்டும் கேட்க வேண்டும் என்றால் தனி குடித்தனம் போவது தான் ஒரே வழி என்று வித்யா சொல்கிறான். அத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து நாளைய எபிசோட்டில் ஸ்ருதியின் செயின் காணாமல்போக அவரது அப்பா, மீனா மீது சந்தேகப்பட, கோபப்பட்ட முத்து அவரை அடுத்துவிடுகிறான். ஸ்ருதியின் அம்மா நினைத்தபடி முத்து சண்டை போட்டு பிரச்சனை உருவாகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment