தமிழில் சீரியலுக்கு பெயர் பெற்ற சன்டிவியில் ஒளிபரப்பாகும் 3 சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில், அதற்கு பதிலாக 4 புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது. இதன் காரணமாக சின்னத்திரையில் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாவதும், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும் தொடர்ந்து வருகிறது. இதில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்கள் முதல் 5 இடங்களை ஆக்கிரமித்து வருகிறனர். குறிப்பாக கிராமபுறங்களில் சன்டிவி சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்து ஒரு சீரியல் 2 வருடங்கள் ஒளிபரப்பாவதும், குறைவான டி.ஆர்.பி ரேட்டிங் பெற்றுள்ள சீரியல்கள் உடனடியாக முடிவுக்கு வருவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது 2 வருடங்களுக்கு மேலாக சன். டிவியில் ஒளிபரப்பாகி வரும் 3 சீரியல்கள் முடிவுக்கு வர உள்ள நிலையில், அதற்கு பதிலாக புதிய 4 சீரியல்கள் ஒளிபரப்பை தொடங்க உள்ளது.
இனியா சீரியலில் இனியாவுக்கு குழந்தை பிறந்தவுடன் சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில், சுந்தரி சீரியலில், சுந்தரியை பழிவாங்க வந்த கார்த்திக் தற்போது திருந்திவிட்டதால் இந்த சீரியலும் அடுத்த வாரத்தில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ள கயல் சீரியலில், சமீபத்தில் கயல் – எழில் திருமணம் நடைபெற்ற நிலையில், விரைவில் இந்த சீரியலும் இறுதிக்கட்டதை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
3 சீரியல்கள் முடிவுக்கு வர உள்ள நிலையில், 4 புதிய சீரியல்கள் என்ட்ரி ஆக உள்ளது. அதன்படி ரஞ்சனி என்ற சீரியல் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.டிம்பிள் நாயகியாக நடித்துள்ள இந்த சீரியலில், நடிகர் சந்தோஷ் நாயகனாக நடிக்க உள்ளார். இனியா சீரியல் ஒளிபரப்பான அதே டைமில் இந்த ரஞ்சனி சீரியல் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அன்பே வா சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை டெல்னா டேவிஸ், சன்டிவியின் ஆடுகளம் சீரயில் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இந்த சீரியலின் ப்ரமோ இணையத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. மௌனராகம் சீரியல் நாயகன், சல்மானுள் ஃபையர்ஸ் இந்த சீரியலில் நாயகனாக நடிக்க உள்ளார்.
சுந்தரி சீரியலில் நடித்த ஜிஷ்னு நாயகனாக நடிக்க உள்ள ராகவி என்ற புதிய சீரியலும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் கண்மணி மனோகரன், தேஜஸ்வினி ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளனர். அயலி வெப் தொடரில் நடித்த அபி நட்சத்திரா, கனா காணும் காலங்கள் தொடர் நடிகர் பரத் ஆகியோர் நடிப்பில் உன்னை சரணடைந்தேன் என்ற புதிய சீரியலும் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“