முக்கிய சீரியலில் இருந்து விலகும் நடிகை திவ்யா கணேஷ்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலணி செயலாளர் பதவியில் வெற்றி பெறுவது பாக்யாவா அல்லது ராதிகாவா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சீரியலில் பாக்யாவின் மருமகள் ஜெனி கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியின் மற்றொரு தொடரான செல்லாம்மா சீரியலில் மேகா என்ற கேரக்டரில் திவ்யா நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் இருந்து திவ்யா கணேஷ் விலகியுள்ளதாகவும், மேகா கேரக்டருக்கு நடிகை ஸ்ரேயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய மாற்றம்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடிக்கடி நடிகர் நடிகைகள் மாற்றத்தையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே முல்லையின் அக்கா மல்லியின் மகன் பிரஷாந்த் என்ற கேரக்டரில் நடித்து வந்த வசந்த தற்போது மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மகேஷ் சுப்பிரமணியம் என்பவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேறு சீரியலுக்கு மாறிய ரோஜா நாயகன்
சன்டிவியின் ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தினசரி எப்சோடுகள் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வந்தது. 1000 எபிசோடுகளை கடந்த இந்த சீரியலில் சிப்பு சூரியன் பிரியங்கா நல்காரி ஆகியோர் லீடு ரோலில் நடித்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், பிரியங்கா சிப்பு சூரியன் அடுத்து எந்த சீரியலில் நடிக்க உள்ளனர் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே சிப்பு சூரியன் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சத்யா சீரியல் நாயகியின் பிக்பாஸ் சம்பளம்
ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆயிஷா தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பங்கேற்றார். தொடக்க நாளிலேயே இவரை பலரும் அழவைத்த நிலையில், ஆயிஷா விரைவில் வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு பழகிக்கொண்டு 50 நாட்களை கடந்த இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த ஆயிஷாவுக்கு ஒரு நாளைக்கு 28 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் மடியில் பிரபல சீரியல் நடிகர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க ரஜினிகாந்த் கமிட் ஆகி வருகிறார். இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நாளில் பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் தான் சிறுவயதில் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/