Advertisment

கணவர் போட்டோவை வெளியிட்டால் கண்ணு பட்டுடுமா? கோபமான விஜய் டிவி நடிகை

Tamil Serial News : சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்திற்கு கமெண்ட் கொடுத்த அனைவரையும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி பிளாக் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
கணவர் போட்டோவை வெளியிட்டால் கண்ணு பட்டுடுமா? கோபமான விஜய் டிவி நடிகை

TV Actress Sridevi Angry For Social Media Comments : வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல் அவர்களும் ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் அதிக புகைப்படங்கள் போட்டோஷூட் நடத்தி பதிவிட்டு வருகின்றனர். சில நடிகைகள் அவ்வப்போது சமூகவலைதளங்களுக்கு வரும் நிலையில், ஒரு சில நடிகைகள் ஒரு நாளின் பெரும்பகுதியை சமூக வலைதளங்களுக்காக செலவு செய்து வருகினறனர்.

Advertisment

மேலும் ஒரு சில நடிகைகள் சமூக வலைதளங்களின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இந்த உரையாடலில் சில ரசிர்கள்கள் எல்லை மீறும் நிகழ்வும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நடைபெறும்போது அந்த ரசிகரைபிளாக் செய்துவிடுவது நடிகைகள் வழக்கம். இன்னும் சிலர் நடிகைகளின் புகைப்படங்களுக்கு எல்லை மீறி கருத்துக்களை கூறுவார்கள் அவர்களும் இதே நிலையை அமைவது வழக்கம்.  அந்த வகையில் தற்போது சீரியல் நடிகை ஒருவர் தனது புகைபடங்களுக்கு கமெண்ட் கொடுத்த பலரையும் பிளாக் செய்துள்ளார்.

சின்னத்திரையில், கடந்த 2007 ம் ஆண்டு ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. தொடர்ந்து  தங்கம் வாணி ராணி, கல்யான பரிசு, செம்பருத்தி, ராஜா ராணி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து புகழ் கடந்த வருடம் அசோக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில்  தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரின்  வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் வைராலாகி வந்தது.

தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும்,  உங்கள் புருஷனோட புகைப்படங்களை பகிராதீர்கள், கண்ணு பட்டுடும், உங்கள் வீட்டு புகைப்படங்களை பகிராதீர்கள், கண்ணு பட்டுடும். உங்கள் மகிழ்ச்சியான புகைப்படங்களை பகிராதீர்கள், கண்ணு பட்டுடும் என தங்களது கருத்தக்களை கூறியுள்ளார்.

இதை பார்த்து அப்செட் ஆன ஸ்ரீதேவி அந்த கருத்துக்களை கூறி அனைவரையும் பிளாக் செய்துள்ளார். தற்போ குழந்தை பிறந்துள்ள நிலையில். உங்கள் குழந்தை புகைப்படத்தை பகிராதீர்கள், கண்ணு பட்டுடும் எனகூற ஆரம்பித்துள்ளார்கள். அப்படி சொல்பவர்களையும் நான் ப்ளாக் செய்ய தான் போகிறேன. அதற்குள் நீங்களை போய்விடுங்கள். எனக்கு உங்கள் எதிர்மறையான அக்கறைகள் தேவையில்லை ” என ஸ்ரீதேவி காட்டமாக பதில் அளித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment