Baakiyalakshmi Serial Tamil : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதில் நேற்றைய எபிசோட்டின் முடிவில், எழில் தனது அப்பா கோபியை கடுமையாக எச்சரித்த்தை தொடர்ந்து, பாக்யா மீண்டும் மசாலா தொழிலை செய்யலாம் என்று செல்லிவிட்டார். கோபியின் இந்த திடீர் பேச்சு பாக்யா மட்டுமல்ல அவரது குடும்பதினர் அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது. ஆனாலும் பாக்யாவின் மனதில் ஏக சந்தோஷம் தான்.
ஆனால் கோபியின் இந்த மன மாற்றத்திற்கு காணம் ஏழில் தான் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தன் மகன் எது செய்தாலும பாராட்டும் ஈஸ்வரி, என் மகன் நேர்மையானவன் அதனால் தான் யோசித்து இதை சொல்லி இருக்கிறான் என கோபியை தலையில் தூக்கி வைத்து பெருமை பேசுகிறார். ஈஸ்வரி மசாலா என என் பெயரில் ஆரம்பித்த தொழில் மூடப்படுகிறதே என ஒரு உறுத்தல் இருந்தது. ஆனா இப்ப அது இல்ல என் சொல்கிறார்.
இதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சியடையும் பாக்யா அவரா இப்படி வந்து பேசினார் என நம்பவே முடியவில்லை என எழிலிடம் கூறுகிறார். இத்தைனயடுத்து மீண்டும் குடித்து விட்டு ராதிகா வீட்டுக்கு வருகிறார் ராஜேஷ். அப்போது கதவை திறக்கும் மகள் மயூ பயந்துகொண்டு ஓடிவந்து அம்மாவிடம் நிற்கிறார். அதற்கு ராஜேஷ், உங்களை விட்டு போகமாட்டேன், நீங்க போகணும் என நினைத்தால் விடமாட்டேன் என ராஜேஷ் சொல்கிறார்.
அதன்பின் எவ்வளவு சொல்லியும் ராஜேஷ் கேட்காத்தால், மகளுடன் உள்ளே சென்று ராதிகா கதவை மூடிக்கொள்கிறார். அதன் பின் கோபிக்கு போன் செய்கிறார் ராதிகா. ஆனால் பல முறை போன் செய்தும் போனை எடுக்காத கோபி, ராஜேஷ் எழிலை பார்த்ததால் தப்பித்தேன். வேறு யாரையாவது பார்த்து இருந்தால் என் வாழ்க்கையே இன்று இரவு வேறு மாதிரி ஆகி இருக்கும்.
ராதிகாவால் தான் பிரச்சனை வருகிறது என்றால் இனி ராதிகாவே வேண்டாம் என முடிவெடுக்கிறார். அப்போது உள்ளே வரும் பாக்யாவிடம், பாக்யா வா வா உட்காரு என அன்பாக பேசுகிறார். அப்போது மீண்டும் ராதிகாவிடம் இருந்து போன் வருகிறது. அதையும் கோபி எடுப்பதில்லை. அதன் பின் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுகிறார். கோபியும் உதவிக்கு வராததால் ராதிகா அதிரடியாக கையில் கத்தியை எடுக்கும் ராதிகா, ராஜேஷை வெளியில் செல்லும்படி கூறுகிறார்.
அப்படியே ராஜேஷை வெளியில் தள்ளிவிடுகிறார். அப்போது அருகில் இருக்கும் நபர்களை அழைக்கிறார் ராஜேஷ். மனைவி கத்தியை காட்டி என்னை கொலைசெய்து விடுவதாக மிரட்டுகிறார் என ராஜேஷ் சொல்கிறார். 'போய்விடு.. உனக்கு அவ்ளோ தான் மரியாதை' என அவரை திட்டிவிட்டு உள்ளே சென்று கதவை பூட்டிக்கொள்கிறார் ராதிகா. அதன் பின்னும் கோபியை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் கனெக்ட் ஆகவில்லை என்பதால் வருத்தம் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil