/tamil-ie/media/media_files/uploads/2021/08/Baakiyalakshmi-1.jpg)
Baakiyalakshmi Serial Episode Update : கால்வலியால் அவதிப்படும் பாக்யா இரவு முழுவதும் தூங்காமல் காலையில் தூங்குகிறாள். அப்போது ஈஸ்வரி அவளை எழுப்ப, கால் வலி எல்லாம் எப்படி இருக்கு என சத்தியமூர்த்தி கேட்கிறான். அதற்கு பாக்யா நைட் எல்லாம் தூக்கம் வரலை. ஒரே வலி மாமா என சொல்கிறாள். அப்போது அங்கு வரும் ஜெனியிம் இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட என்று கேட்கிறாள் ஈஸ்வரி. அதற்கு ஜெனி அத்தைக்கு உடம்பு சரியில்லைல. அதான் சீக்கிரம் எந்திரிச்சுட்டேன் என சொல்கிறாள்.
அதன்பின்னர் ஜெனி பாக்யாவை குளிக்க அழைத்துச்செல்கிறாள். அப்போது தூங்கி எழுந்து வரும் கோபி காபி கேட்கிறான். அப்போது ஜெனி எவ்வளவு சொல்லியும் பாக்யா கேட்காமல காபி போட்டு தருகிறாள். அதன்பிறகு காலை சாப்பாடு செய்வதற்காக இட்லி மாவை எடுத்து வைக்க சொல்கிறாள் பாக்யா. அப்போது வலியோடு வேலை எப்படி வேலை செய்வீங்க ஆண்டி என்று ஜெனி கேட்க, அதற்கு ஈஸ்வரி அடிப்பட்டு இருக்குன்னு இருபத்தி நாளு மணிநேரமும் ரெஸ்ட் எடுப்பியா என சொல்கிறாள்.
அதனைத் தொடர்ந்து கோபியும் டாக்டர் அப்படித்தான் சொல்லுவாங்க பாக்யா உனக்கு வலி இருந்தா பெயின் கில்லர் மாத்திரை போட்டுக்க. இப்போ காலை சாப்பாடு மட்டும் செய் என சொல்லிவிட்டு போகிறான். அதன்பின்னர் ஜெனி, என்ன அத்தை இங்க இருக்க யாரும் உங்க வலியை புரிஞ்சுக்கவே மாட்றாங்க என சொல்லிவிட்டு, நான் பார்த்துக்கிறேன். நீங்க உட்காருங்க என்கிறாள்.
ஆனால் பாக்யா அதெல்லாம் வேணாம் ஜெனி, நேத்தே திட்டுனாங்க நீ கெல்ப் மட்டும் பண்ணு என சொல்கிறாள். உன்னால தான் லேட் என்று சொல்லும் கோபி, ஏற்கனவே வீட்டு வேளைக்கு எல்லாம் ஆள் இருக்கு. இப்போ சமைக்கவும் ஆள் வைச்சுருவோமா என கேட்கிறான். அதற்கு ஈஸ்வரி அப்போ இவ என்ன பண்ணுவா என கேட்கும் போது, நல்லா படுத்து ரெஸ்ட் எடுக்கட்டும்மா என கிண்டலாக சொல்கிறான்.
இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு நம்மீது அக்கரை இல்லை என்று வருத்தப்படும் பாக்யா மறுநாள் காலை எழுந்து வழக்கம்போல் வேலை செய்கிறாள் அத்துடள் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.