எழவே முடியாத அளவுக்கு கண்ணம்மாவுக்கு விழப்போகும் அடி..!

Tamil Serial Update : சின்னத்திரையில் அதிக ரசிகர்களை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடு பற்றி பார்க்கலாம்

Tamil Serial Update : சின்னத்திரையில் அதிக ரசிகர்களை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடு பற்றி பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
எழவே முடியாத அளவுக்கு கண்ணம்மாவுக்கு விழப்போகும் அடி..!

Tamil Serial Bharathi Kannamma Today Episode : சின்னத்திரையின் விறுவிறுப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

Advertisment

இன்றைய எபிசோட்டில் அப்பா பெயர் என்னவென்று கேட்கும் லட்சுமியிடம் பாரதி  என்று சொல்கிறாள் கண்ணம்மா. இதை கேட்ட லட்சுமி பாரதியிடம் சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறான். ஆனால் இதை கேட்டு சுதாரித்துக்கொண்ட வெண்பா, இந்த பெயர் என்ன உனக்கு மட்டுமா இருக்கு என கேட்க பாரதி சகஜ நிலைக்கு வருகிறான். அதன்பிறகு லட்சுமிக்காக பீஸ் கட்டும் பாரதி, அட்மிஷன் பார்ம் எல்லாம் பூர்த்தி செய்கிறான்.

அதன்பிறகு லட்சுமியிடம் இந்த ஸ்கூல் உனக்கு பிடிச்சு இருக்கா என கேட்கும் போது, ரொம்ப பிடிச்சு இருக்கு என சொல்கிறாள். அப்போ கண்டிப்பா கலெக்டர் ஆகிருவ, உனக்கு புக்ஸ், அப்புறம் படிப்பு சம்பந்தமா எது தேவைப்பட்டாலும் என்கிட்டே கேளு. ஹேமாவ டிராப் பண்ண அடிக்கடி நான் இங்க வருவேன் என்று கூறும் பாதியின் காலில் லட்சுமி விழுகிறாள். என்ன இதெல்லாம் என பாரதி கேட்கும் போது, இல்ல அங்கிள் நமக்கு உதவி செய்றவங்களுக்கு எப்பவும் நன்றி கடனோட இருக்கனும்னு எங்க அம்மா சொல்லிருக்கங்கா என லட்சுமி சொல்கிறாள்.

அப்போது, பாரதி, வாழ்க்கையில எப்பவும் யார் கால்லயும் விழக்கூடாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறான். இதற்கிடையில் வீட்டில் அகிலும், அஞ்சலியும் ஒன்றாக சந்தோஷமாக இருப்பதை பார்த்து நிம்மதி அடையும், சௌந்தர்யாவை அழைக்கும் அகில், அவளுக்கு தாங்கள் செய்த ரசகுல்லாவை கொடுத்து சாப்பிட சொல்கிறான். அதை சார்பிடும் சௌந்தர்யா பார்த்து ரொம்ப அருமையா செஞ்சுருக்கீங்க, 'எப்பவும் இப்படியே சந்தோஷமா இருங்க' என சொல்கிறாள்.

அதன்பிறகு ஹேமாவிற்கு சாப்பாடு கொண்டு வரும் சௌந்தர்யா, லட்சுமி எங்கே என கேட்க, ஹேமா லட்சுமியை அழைத்து வருகிறாள் அதன்பிறகு தான் கொண்ட வந்த சாப்பாட்டை சௌந்தர்யா இருவருக்கும் ஊட்டி விடுகிறாள். அப்போது சௌந்தர்யா, இந்த ஸ்கூல் உனக்கு பிடிச்சுருக்கா என லட்சுமியிடம் கேட்கும் போது, ரொம்ப பிடிச்சு இருக்கு, டாக்டர் அங்கிள் 'ரொம்ப செலவு பண்ணி என்னை இங்க சேர்த்தாங்க' என சொல்கிறாள். பாரதி ஸ்கூல்ல சேர்த்ததோடு அவன் வேலை முடிஞ்சிருச்சு, நீதான் நல்லா படிக்கனும் இனிமேல் என சொல்கிறாள் சௌந்தர்யா.

Advertisment
Advertisements

அதன்பிறகு ரெண்டு பேரும் சண்டை போடாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஒற்றுமையா இருக்கணும். டெய்லி மதியம் வந்து நான் உங்களை  பார்ப்பேன் என சொல்கிறாள். இதனைத் தொடர்ந்து வெண்பாவின் வேலைக்கார பெண் தான் கண்ணம்மாவிடம் அடிவாங்கியதை பற்றி வெண்பாவிடம் சொல்கிறாள் கை நீட்டுற அளவுக்கு வந்துட்டாளா அவ, அடுத்த அடி அவளுக்கு எந்திரிக்கவே முடியாத அளவுக்கு அடி கொடுப்போம் என சொல்கிறாள் வெண்பா. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: