![pandian Stores: பிளஸ்2 புக்குடன் வந்த முல்லை; மூட்டி விட்ட மீனா](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/04/Pandian-Stores-meena.jpg)
Tamil Serial Update Vijay TV Pandian Stores Serial : விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
விஜய் டிவி ரியாலிட் ஷோக்களுக்கு மட்டுமல்லாமல் விறுவிறுப்பான சீரியலுக்கும் பிரபலமானது. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதரர்களின் பாசம், கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளைய எபிசொட்டில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து ரசிகர்கள் யூகிக்க முடியாத அளவிற்கு பரபரப்பை அதிகரித்துள்ளது.
இந்த ஹிட் சீரியலில், நேற்றைய எபிசோட்டில், முல்லை கொண்டு வரும் பார்சலை பிரித்து பார்க்கும் மீனா, இது என்னாங்க பிளஸ் 2 புத்தகம் என கேட்கிறாள். தனமும் 'இது எதுக்கு உனக்கு என கேட்கும் போது', பதில் சொல்லும் முல்லை எங்க வீட்டு பக்கத்துல இருக்க ஒரு கஷ்டப்படுற பையனுக்கு வாங்குனது. என் பிரண்டோட அப்பா புக் கடை வச்சு இருக்காரு, அதான் அவர் கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தோம் என்று கூறுகிறார். அப்போது மீனா, 'இத ஏன்ங்க பயந்து பயந்து எடுத்துட்டு வந்தீங்க' என கேட்க, மதியம் வரும்போது பின்னாடி வச்சுட்டு எடுக்க மறந்துட்டேன, வேற ஒன்னும் இல்லை என முல்லை பதில் கூறுகிறாள்
ஆனாலும் முல்லையின் பேச்சில் நம்பிக்கை இல்லாத மீனா அதை பற்றியோ யோசித்துகொண்டிருக்க, காலேஜ் முடித்துவிட்டு கண்ணன் வீட்டிற்கு வருகிறான். அவனிடம் மீனா நடந்தவற்றை கூறுகிறாள். இதை கேட்ட கண்ணன், அண்ணி பிளஸ் 2 புக்கை வைச்சு என்ன பண்ண போறாங்க என கேட்கும் போது, மீனா, நான் சொன்ன மாதிரி இல்லாம நீயா கேட்குற மாதிரி கேளு என சொல்கிறாள். ஆனால் அதற்குள் கண்ணனுக்கு மெசேஜ் வரவும் வெளிய போக கிளம்புகிறான்.
இதனை பார்த்த தனம், 'இப்ப எதுக்குடா வந்ததும் கிளம்புற' என கேட்கும் போது, காலேஜ் நோட்ஸ்ல ஒரு டவுட் அண்ணி, அதான் பிரண்ட் கிட்ட கேக்க போறேன் என செல்லிவிட்டு கிளம்புகிறான். அவன் போன பிறகு மீனா, தனத்திடம் 'இவன் சரியில்லை ஏதோ பொண்ணதான் பார்க்க போறான்' என சொல்கிறாள். அதற்கு தனம் கண்ணன் அப்படிலாம் பண்ண மாட்டான் என சொல்கிறாள். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவை பார்த்து கண்ணன் பேசிக்கொண்டிருக்கும்போது மூர்த்தி அந்த பக்கமாக வருவதை பார்த்து ஒளிந்து கொள்கிறான்.
மூர்த்தி அவர்களை கடந்து சென்ற பிறகு, ஏன் மாமா, நான் உன் சொந்தக்கார பொண்ணு தானா, அப்புறம் ஏன் இப்படி பயப்படுறா என ஐஸ்வர்யா கேட்கும் போது, பதில் கூறும் கண்ணன் உனக்கு தெரியாது ஐசு 'அண்ணன் மட்டும் என்னை பார்த்திருந்தா வீட்டுக்கு கூட்டிட்டு போய் பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ணிருக்கும்' என்று சொல்கிறான். இதனையடுத்து கடையில் இருக்கும் குமரேசன், நான் திருநெல்வேலி போயிட்டு வரவா? என கேட்கிறாள்.
ஏன் மாமா இப்ப திடீர்ன்னு ஊருக்கு போகணும்னு சொல்றீங்க என கேட்கும் போது, கடையில் வியாபாரம் நடந்து நாலு நாள் ஆக போகுது. நம்மல கூண்டோட தூக்க பிளான் பண்ணி தான் புது கடையை ஜீவா மாமனார் ஓபன் பண்ணி வச்சு இருக்காரு. அன்னைக்கு ஜனார்த்தனோட பிஏ என்ன சொன்னான். 'டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஓபன் பண்ணி, ஜீவாவ அங்க இழுக்க போறான்னு சொன்னான்ல' என குமரேசன் கூறுகிறார். ஆனால் இதை மறுக்கும் கதிர் அண்ணன்ல அப்படி போகாது என சொல்கிறான். அப்போது கடை வியாபாரம் குறித்து மூர்த்தியும் வருத்தப்படுகிறான்.
அதன்பிறகு வீட்டில் தனம், 'கண்ணன் ஒரு பொண்ணு கூட போயிருக்கான்னு ஏன் சொன்ன' என மீனாவிடம் கேட்கும்போது, கண்ணனும் வீட்டிற்குள் வருகிறான். அவனை உட்கார வைத்து 'நீ எங்கடா போயிட்டு வர்ற' என தனம் கேட்கிறாள். அப்போது கண்ணன் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறான், தனமும் விடாமல் அவனிடம் எங்க போயிட்டு வந்த என தொடர்ந்து கேட்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. இன்றைய எபிசோட்டில் கண்ணன் உன்மையை கூறுவானா? கடையின் வியாபாரம் குறித்து மூர்த்தியின் யோசனை என்ன? முல்லையின் +2 புத்தகத்தின் மர்மத்தை மீனா கண்டுபிடித்தாரா என்று இனி வரும் எபிசோட்கள’ விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.