வீட்ல இருந்து பணத்த எடுத்தது கண்ணன்தானு கதிருக்கு தெரிஞ்ச்சிடுச்சி. அதனால கதிரு கண்ணன் கிட்ட பழைய மாதிரி பேசரது இல்ல. இதனால அப்சட்டான கண்ணன், கதிர்கிட்ட மன்னிப்பு கேட்டு பழைய மாதிரி பேசு அண்ணா அப்டினு சொல்ரான். மேலும் நான் பணத்தை எடுத்தது தப்புதான். அதுக்காக நீ போஸ்டர் ஒட்டுறது கேள்வி பட்டு ஒரு மாதிரி இருக்கு, நான் இந்த மாதிரி ஏதாவது வேலை பார்த்து பணத்தை திருப்பி தந்துடுறேன். தயவுசெஞ்சு பேசு அண்ணே அப்டினு சொல்ரான். இதையெல்லாம் கெட்ட கதிரு அமைதியா இருக்க நீ மட்டும் பேசலன்னா, நிஜமாவே நான் கிணத்துல விழுந்துருவேன் என சொல்கிறான்.
நீ ஏன் விழுகுற நானே தள்ளி விடுறேன் என அவனை பிடித்து இழுக்கிறான் கதிர், முல்லை அப்போது தடுக்கிறாள். முதல் இந்த மாதிரி மிரட்டுறதை நிப்பாட்டு, மறுபடியும் இந்த மாதிரி தப்பு பண்ணாத னு கதிர் சொல்ரான். அப்போ என்கூட பழைய மாதிரி பேசுவியா என கண்ணன் கேட்க உன்கூட பேசாம நான் எத்தனை நாள் இருக்க போறேன் என சொல்லி சமதானம் ஆகிறான். அந்த நேரத்தில், பரிட்சைக்கு டைம் டேபிள் வந்துருச்சு என முல்லை சொல்ல, எதுவும் படிக்கல என்ன பண்றது தெரியலை என கதிர் சொல்கிறான்.
அப்போது அவள் அதுக்குதான் ஒரு மாதிரி இருக்கீங்கலா என முல்லை கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணன் போயிருக்குல கேஸ் விஷயமா போயிருக்காரு, அந்த கேஸ் நமக்கு சாதகம் ஆகிருச்சுன்னா, நம்மோட எல்லா பிரச்சனையும் சரியாகிடும், இது அப்பாவோட கடைசி பூர்வீக சொத்து. இதை விட்டுட கூடாதுன்னு தான் அண்ணன் இவ்வளவு கஷ்டப்படுது என சொல்கிறான். கவலை படாம இருங்க அதெல்லாம் நமக்கு சாதகமா தீர்ப்பு வந்துடும் என சொல்கிறாள் முல்லை.
மறுநாள் கதிரிடம் பேசும், தனம்,, கேஸ் பற்றியே யோசனையா இருக்கு. இதுல நம்ம ஜெயிச்சா ரொம்ப நல்லா இருக்கும் என சொல்ல, பாப்பாவை வயித்துல வைச்சுட்டு இவ்வளவு கவலை படாதீங்க என சொல்லி கதிர் சமதானம் செய்கிறான். அதன்பிறகு கதிர் நான் சமைக்கிறேன் என்று சொல்லி செல்ல, அவனுக்கு உதவி செய்ய முல்லையும் மீனாவும் வருகின்றனர். நீங்கலாம் வேணா, நானே பாத்துக்கிறேன் என சொல்லும் கதிர், அண்ணாங்களுக்கு பிரியாணி செய்வதாக சொலகிறான்.
அந்த நேரத்துல கண்ணனுக்கு போன் செய்யும் ஐஸ்வர்யா நான் உண்மை பார்க்க வேண்டும் என சொல்ல, அவன் வீட்ல இருக்கேன், வர முடியாது என சொல்லும் சொல்லாரான். ஆனா அதை கண்டுக்காத ஐஸ்வர்யா, நீ வர்றியா இல்லை நான் உன் வீட்டுக்கு வரவா என கேட்கிறாள். அதன்பிறகு பிரெண்ட்டை பார்க்க போறேன் என கதிரிடம் சொல்லிவிட்டு செல்கிறான். அங்கு சென்றவுடன், ஏன் முன்ன மாதிரி பேச மாட்ற என ஐஸ்வர்யா கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்கிறான் கண்ணன். இப்ப கூட நான் சண்டை போட்டு கூப்பிட்ட பிறகு தான் வந்துருக்க, முன்ன மாதிரி இல்லை நீ. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
உனக்கு என்ன பிரச்சனைனு சொல்லு என கேட்கிறாள். அப்போது அவன் நான் வீட்ல திருடி தான் உனக்கு பீஸ் கட்டுனேன் நீ ஏன் முல்லை அண்ணி கிட்ட சொன்ன, என கேட்கிறான். இதனால் ஐஸ்வர்யா அதிர்ச்சியில் உறைய அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.