/tamil-ie/media/media_files/uploads/2021/07/Result.jpg)
Pandian Stores Serial Episode Update : கண்ணனுடன் பேசி கொண்டிருந்த ஐஸ்வர்யாவை, கண்டிக்கும் கஸ்தூரி, இவ சரியே இல்லை. என்கிட்டயே கண்ணனை பிடிச்சு இருக்குன்னு சொல்றாம்மா என அவள் அம்மாவிடம் கூறுகிறாள். அவள் அம்மா அவள் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இதற்கிடையில் முல்லை கதிரிடம், நாளைக்கு உங்க ரிசல்ட் நியாபகம் இருக்கா? என கேட்க நாளைக்கு தான, எனக்கு பயமா இருக்கு முல்லை என என கதிர் கூறுகிறான்.
அதற்கு முல்லை, கண்டிப்பா நீங்க பாஸ் பண்ணிருவீங்க. தைரியமா இருங்க. ரிசல்ட் வந்த பிறகு எல்லார்கிட்டயும் சொல்லுவோம். என சொல்கிறாள். இதற்கிடையில் ஜீவா மீனா இருவரும் பழைய நடைவண்டி, புது நடைவண்டி என இரண்டையும் மாற்றி மாற்றி குழந்தையை ஓட்ட வைத்து சண்டை போடுகிறார்கள். அப்போது அங்கு வரும் மூர்த்தி, அவர்களை திட்டிவிட்டு கயலை வாங்கி கொண்டு போகிறான்.
இதனிடையே அடுத்த நாள் அம்மா வீட்டுக்கு போறோம் என கதிரும், முல்லையும் சொல்லி ரிசல்ட் பார்க்க கிளம்புகின்றனர். அப்போது அங்கு வரும் மீனா அடிக்கடி இவுங்க ரெண்டு பேரும் வேற எங்கயோ போயிட்டு இருக்காங்க. நீங்க முல்லை வீட்டுக்கு போன் பண்ணி கேட்டு பாருங்க என சொல்லும்போது, ஆரம்பிச்சுட்டீயா. அவுங்க முல்லை வீட்டுக்கு தான் போயிருக்காங்க என தனம் சொல்கிறாள்.
இதற்கிடையில் ரிசல்ட் பார்க்க முதல்லை நியூஸ் பேப்பர் வாங்கி பார்க்கிறாள். அதில் கதிர் நம்பர் என முல்லை சொல்லும்போது சோகமாகும் கதிர் நான் ஒழுங்க எழுதி இருக்கணும் என சொல்கிறான். அதற்கு மல்லை பரவால்ல விடுங்க அடுத்த தடவை பார்த்துக்கலாம் என சொல்கிறாள். அப்போது கதிர், நீ எனக்காக நெறைய பண்ண உனக்காகவாது நான் பாஸ் ஆகியிருக்கணும் முல்லை என சொல்கிறான்.
அதெல்லாம் ஒன்னும் இல்லங்க 3 மாசத்துல யாரும் 6 சப்ஜெக்ட் எழுத மாட்டாங்க. நீங்க எழுதி இருக்கீங்கள்ள. வர்ற அக்டோபர்ல திரும்பி எழுதலாம் என சொல்கிறாள். அப்போது நான் நல்லா தான் எழுதினேன் முல்லை. பெயில் ஆகுற அளவுக்கு எழுதலை என கவலையாக சொல்கிறான். அப்போது அவள் அவனை சமாதானம் செய்ய இன்றைய எபிசொடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.